தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 8 வார்டுகளில் தி.மு.க. 4, அ.தி.மு.க. 4 என வெற்றி பெற்று சமபலத்தில் உள்ளதால் தலைவர் பதவிக்கு இன்று தேர்தல் நடைபெற இருந்தது.
தலைவர் தேர்தலுக்கு 50 சதவீத உறுப்பினர்களுக்கு மேல் இருக்க வேண்டும். ஆனால் இன்று போதிய உறுப்பினர்கள் வராததால் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சியிலும் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
மறைமுக தேர்தலை பெரும்பாலான உறுப்பினர்கள் புறக்கணித்ததால் தேர்தல் ஒத்திவைப்பட்டதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.
நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவராக திமுக வேட்பாளர் ஜெயந்தி வெற்றி பெற்றார்
நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் பதவியில் போட்டியிட விசிகவுக்கு வாய்ப்பு அளித்திருந்தது திமுக
இந்தநிலையில் திமுக கூட்டணியின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து திமுக வேட்பாளர் ஜெயந்தி போட்டியிட்டார்.
மறைமுக தேர்தலில் 23 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் ஜெயந்தி வெற்றிபெற்றார்.
உசிலம்பட்டி நகராட்சி தலைவர் மறைமுக தேர்தலில் திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் செல்வியை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் போட்டி வேட்பாளர் சகுந்தலா வெற்றிபெற்றார்.
திருமுருகன்பூண்டி நகராட்சியில் தி.மு.க. கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பிரமணியம் அறிவிக்கப்பட்ட நிலையில் இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக அதிருப்தி வேட்பாளர் குமார் வெற்றிபெற்றார்.
குமார் 15 வாக்குகளும், சுப்பிரமணியம் 12 வாக்குகளும் பெற்றனர்
கரூர் மாவட்டம், புலியூர் பேரூராட்சி தலைவராக புவனேஷ்வரி தேர்வானார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு புலியூர் பேரூராட்சி ஒதுக்கிய நிலையில் திமுகவை சேர்ந்தவர் தலைவராக வெற்றி பெற்றார்.