சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன.
சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தில் பட்டையை கிளப்பி வருகின்றன. வனவிலங்குகள் தொடர்பான வீடியோக்கள் எப்போதும் சமூக ஊடகங்களை தெறிக்க வைக்கும்.
சில நேரங்களில் இரண்டு விலங்குகள் காட்டின் நடுவில் ஒரு அபாயகரமான சண்டையில் ஈடுபட்டிருப்பதைக் காண்கிறோம்.
இந்த விலங்குகள் சில சமயம் பாசத்தையும் சில சமயம் பகையையும் வெளிக்காட்டுகின்றன. பொதுவாக நாம், சிங்கம், சிறுத்தை, புலி போன்ற விலங்குகளை எப்போதும் ஆக்ரோஷமான பாணியிலேயே பார்த்துள்ளோம்.
ஒரு சிங்கம் அதன் இரையைப் பின்தொடர்ந்தால், அதை அடையாமல் விடாது என்பது நம் அனைவருக்கும் தெரியும். சிங்கம் தன் இரையை விட்டுவிட்டு ஓடிப்போகும் சந்தர்ப்பங்கள் மிகக் குறைவு.
பல சிங்கங்கள் எருமை மாடுகளின் கூட்டத்துக்கு முன்னால், தங்கள் வாலை சுருட்டிக்கொண்டு ஓடுவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரலாகி வரும் இந்த வீடியோ-வில், காட்டுக்குள் சிங்கத்தை துரத்திச் செல்லும் ஒரு எருமைக் கூட்டத்தைக் காண முடிகின்றது. முதலில் பல சிங்கங்கள் சேர்ந்து ஒரு எருமையைச் சுற்றி வருவதை காண்கிறோம். ஆனால் அடுத்த நொடியே எருமைக்கூட்டம் சிங்கங்கள் மீது பாய்கிறது.
திடீர் தாக்குதலால், சிங்கங்கள் பீதியடைந்து, வாலை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து ஓடுகின்றன. ஒற்றுமையாக இருந்தால் எந்த பெரிய பிரச்சனையும் வராது என்ற பாடத்தை இந்த வீடியோ அனைவருக்கும் அளிக்கின்றது.
காட்டு விலங்குகள் தொடர்பான இந்த வீடியோ nature27_12 என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது.
இந்த வீடியோ இதுவரை ஆயிரக்கணக்கான வியூஸ்களையும் லைக்குகளையும் பெற்றுள்ளது. இந்த வீடியோவை பார்த்து சமூக வலைதளவாசிகள் எருமை மாடுகளின் ஒற்றுமையை பாராட்டி வருகின்றனர்.