― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்காப்பி அடிக்க.. கடவுளிடம் பிரார்த்தனை..! வைரலான மாணவன் செயல்!

காப்பி அடிக்க.. கடவுளிடம் பிரார்த்தனை..! வைரலான மாணவன் செயல்!

கள்ளக்குறிச்சியில் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத சென்ற மாணவர் ஒருவர் பிட்டு பேப்பரை வைத்து சாமி கும்பிடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவர் தேர்வில் காப்பி அடிப்பதற்காக பிட்டு பேப்பர்களை எழுதி வைத்துள்ளார்.

அரசு பள்ளிகளில்ல் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடந்து வருகிறது. இந்த தேர்வை எழுத தயாரான மாணவர் ஒருவர், கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார்.

பொதுவாக தேர்வு எழுத செல்லும் மாணவர்கள், கோயிலுக்குச் சென்று தேர்வில் எப்படியாவது படித்த கேள்வி வந்துவிடவேண்டும் எனவும் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் எனவும் வேண்டுவர்.

இந்த மாணவர் தேர்வுக்கு செல்வதற்கு முன்னால் கோவில் ஒன்றில் அந்த பிட்டு சீட்டுகளை வைத்து கற்பூரம் ஏற்றி கும்பிடும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதற்கிடையே சம்பந்தப்பட்ட மாணவர் யார் என்பதை கண்டறிந்து அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கல்வித்துறை அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.

இதை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் குன்னத்தூரில் இருந்து வீடியோ வெளியாகிய நிலையில் வீடியோவில் உள்ள நபர் அப்பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் என்கிற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Exit mobile version