சில தருணங்கள், நிகழ்வுகள் நம் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும் , ஆம் அந்த மகிழ்ச்சியினைத்தான் நாம் சிறந்த பரிசாகக் கருதுவோம்.
அந்த வகையில் ஐஏஎஸ் அதிகாரி அவனிஷ் ஷரண் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் ஒரு ஏழை சிறுவனின் தந்தை தனது வீட்டிற்கு ஒரு பழைய சைக்கிளை வாங்கி வருகிறார். பார்த்தவுடன் அவரின் செல்ல மகன் துள்ளிக் குதிக்கிறான்.
அந்த சிறுவனின் தந்தை வாங்கி வந்த சைக்கிளுக்கு மாலை அணிவித்து வணங்குகிறார். அந்த சிறுவனும் ஆனந்தமாகத் தந்தையுடன் சேர்ந்து வணங்குகிறான். இந்த அழகான தருணத்தைக் கூறும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவைனை ஷேர் செய்த ஐஏஎஸ் அதிகாரி அவனிஷ் ஷரண் தனது ட்விட்டர் பதிவில் “இது ஒரு செகண்ட் ஹேண்ட் சைக்கிள்தான் ஆனால் அவர்களின் முகத்தில் உள்ள மகிழ்ச்சியைப் பாருங்கள்.
அவர்கள் ஒரு புதிய மெர்சிடிஸ் பென்ஸ் காரை வாங்கியுள்ளதைப் போன்று அவர்களின் மகிழ்ச்சி உள்ளது என்று கூறியுள்ளார்.
இந்த வீடியோ தற்போது 3 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களைக் கடந்துள்ளது.
It’s just a second-hand bicycle. Look at the joy on their faces. Their expression says, they have bought a New Mercedes Benz.❤️ pic.twitter.com/e6PUVjLLZW
— Awanish Sharan (@AwanishSharan) May 21, 2022