மதுரை: தென் மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையயில், வைகை அணையில் இருந்து பத்தாயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படும் நிலையில் வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை மாவட்ட ஆட்சித் தலைவர் மூலம் விடுக்கப்பட்ட நிலையில் சோழவந்தான் பகுதிகளில் வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு அந்தந்த பகுதி ஊராட்சியின் சார்பாக ஒலிபெருக்கிகள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சோழவந்தான் அருகே உள்ள முள்ளி பள்ளம் ஊராட்சியில், ஊராட்சி சார்பாக வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு ஒலிபெருக்கிகள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது .
அதில், வைகை அணையில் தண்ணீர் அதிகமாக திறந்து விடப்பட்டுள்ளதால், கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் எனவும், ஆற்றில் குளிக்கவும் மற்ற காரணங்களுக்காக இறங்க வேண்டாம் எனவும் கால்நடைகளை ஆற்றின் கரையோரங்களில் அழைத்துச் செல்ல வேண்டாம் எனவும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கும் படியும் ஒலிபெருக்கிகள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
மதுரை கோரிப்பாளையம் வைகை ஆற்றுப் பகுதிகளில் வைகை நதியில் நீர் அதிகளவில் பெருக்கெடுத்து செல்வதால், போலீஸார் தரைப்பாலம் பகுதியில் நடந்து செல்ல வேண்டாம் எனவும், ஆற்றுக்குள் குளிக்க இறங்க வேண்டாம் என எச்சரிக்கின்றனர்.
சோழவந்தானில் மழையில் நனைந்தவாறு பள்ளி சென்ற மாணவிகள்!
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம்,
சோழவந்தான் பகுதியில், தொடர் மழை காரணமாக மழையில் நனைந்தும் குடை பிடித்தும் பள்ளி சென்ற மாணவிகள் இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோக்களிலும் பள்ளிக்கு வந்தனர்.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் கன மழை பெய்து வரும் நிலையில் நேற்று இரவு முதல் மதுரையின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தவண்ணம் உள்ளது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் வாடிப்பட்டி பகுதிகளிலும் நேற்று இரவு முதல் தற்போது வரை தொடர்ந்து மழை பெய்து வருகிறது இந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடுத்த நிலையில், மதுரை மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கவில்லை இதன் காரணமாக இன்று காலை முதல் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் மழையில் நனைந்த படியும் குடை பிடித்த படியம் பள்ளிக்கு சென்றனர்.
மேலும், தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால், ஒரு சில இடங்களில் ஆட்டோ களிலும் இருசக்கர வாகனங்களில் மாணவ மாணவிகளை அவர்களின் பெற்றோர்கள்பள்ளிக்கு அழைத்து வந்து விட்டுச் சென்றனர் பல்வேறு சங்கங்கள் மதுரை மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் மழையில் நனைந்தவாறு சென்றனர்.
மதுரை நகரில் சிம்மக்கல்,கோரிப்பாளையம், புதூர், அழகர்கோவில், திருப்பாலை, அண்ணாநகர், கருப்பாயூரணி, வண்டியூர், யாகப்ப நகர் உள்ளிட்ட பகுதிகளிலிலும், காலை முதலே மழை தொடர்ந்து பெயர்ந்து கொண்டிருந்தது.