முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியுசிலாந்து அணியை இந்தியா 157 ரன்களில் ஆட்டம் இழக்கச் செய்தது.
ஆஸ்திரேலியாவை அடுத்து நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது இந்திய அணி. அங்கு 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
முதல் போட்டி இன்று நேப்பியரில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய குப்தில் 5 ரன்களிலும், கொலின் முன்ரோ 8 ரன்களிலும் முகமது சமி பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து ரோஸ் டெய்லர் 24 ரன்களிலும், டோம் லாதம் 11 ரன்னிலும் சாஹல் பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
ஹென்றி நிக்கோலஸ் 14 ரன்கள் எடுத்தார். சண்ட்னெர், முகமது சமி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
இந்திய அணி அபார பந்து வீச்சை வெளிப்படுத்தியது. இதனால் நியூஸிலாந்து அணியில் விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்ந்தன. அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் மட்டும் தாக்குப்பிடித்து அரைசதம் அடித்தார். அவர், 81 பந்தில் 64 ரன் எடுத்தார்.
இதை அடுத்து நியூஸி அணி 38 ஓவர்களில் 157 ரன்களில் அனைத்து விக்கெடுகளையும் இழந்து 158 ரன்னை இந்தியாவுக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது.