ராஜஸ்தான் மாநில பாஜக தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான மதன் லால் சைனி(75) நேற்று மாலை காலமானார். அவரது மறைவுக்கு பாஜக., தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.
மதன்லால் சைனி மறைவை அடுத்து, இன்று தில்லியில் நடைபெறவிருந்த பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அவரது மறைவுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
The passing away of Shri Madanlal Saini Ji is a major loss for the BJP family. He contributed to strengthening the Party in Rajasthan. He was widely respected for his congenial nature and community service efforts. My thoughts are with his family and supporters. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) June 24, 2019
இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் குறித்து விவாதிப்பதற்காக பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று காலை நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் மதன் லால் சைனி மறைவை அடுத்து, பாஜக நாடாளுமன்ற குழுக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
ராஜஸ்தான் மாநில பாஜகவின் தலைவர் திரு. மதன்லால் சைனி காலமானார். சமீபத்திய தேர்தலில் பாஜகவின் மகத்தான வெற்றிக்கு காரணமாக இருந்தார். அவரது மறைவு நமக்கு பேரிழப்பாகும். அன்னாரின் ஆன்மா நற்கதியடைய இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். pic.twitter.com/lCx9ffJBwv
— H Raja (@HRajaBJP) June 25, 2019