இந்நிலையில், அங்கன்வாடி குழந்தைகளுக்கு கழிவறையில் சமைப்பது தவறு இல்லை என மத்திய பிரதேச அமைச்சர் இமார்த்தி தேவி தெரிவித்துள்ளார்.வீட்டில் குளியலறையுடன் கழிவறை இருப்பதால் உறவினர்கள் தங்களது வீட்டில் சாப்பிட மறுப்பார்களா? என அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும் ‘குளியலறையில் பாத்திரங்கள் வைக்கலாம். நாம் நமது வீடுகளிலும் பாத்திரங்கள் வைத்திருக்கிறோம். பயன்படுத்தப்படாத பாத்திரங்களை அடுக்கி வைக்கிறோம். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது’ எனத் தெரிவித்தார்.