சிலந்தி கடித்து விட்டதா?
ஆடாதொடை இலையை பச்சை மஞ்சளுடனும் மிளகுடனும் சரி சமன் எடையாக எடுத்து, அரைத்து கடிவாயில் வைத்துக் கட்டலாம்.
ஓணான் கடிக்கு…
மூங்கில் குருத்து எடுத்து சாறு எடுக்க வேண்டும். 2 அவுன்ஸ் சாறில் மிளகு சூரணம் 10 கிராம் சேர்த்து காலை, மாலை மூன்று நாள்கள் சாப்பிட குணமாகும்.
தேன் குளவி கொட்டுக்கு…
கொட்டின இடத்தைத் தேய்க்கவே கூடாது. விஷம் இறங்கி அவதி அதிகமாகும். கொட்டுப்பட்ட இடத்திலுள்ள முள்ளை மட்டும் உடைத்து. விஷப்பையை மேலோடு கிழித்து எடுத்து விட்டு உடனே சிறிது மண்ணெண்ணெயைத் தேய்க்க வேண்டும்.
வெறி நாய் கடித்து விட்டதா?
பச்சை மஞ்சள், முப்பட்டையுள்ள பிரண்டை இரண்டையும் சம அளவு எடுத்து மை போல் அரைத்து நல்லெண்ணெயில் சூடேற்றிக் கடித்த இடத்தில் மூன்று நாள்கள் வைத்துக் கட்டி வந்தால் வெறி நாய்க்கடி விஷம் நீங்கும்.
குதிரை கடித்து விட்டதா?
அமுக்கரா கிழங்கு 70 கிராம் சூரணித்து தினசரி இரண்டு வேளை சிட்டிகை அளவு சுத்தத் தேனில் குழப்பி சாப்பிடவும் அவுரி சமூலம் எடுத் தரைத்து சாறு பிழிந்து கடிவாயில் பூசி கட்டுப் போடவும். சில நாள்களில் குணம் தெரியும்.
குளவி கொட்டி விட்டதா?
விளாம்பழத்தின் ஓட்டை எடுத்து சிறிது நீர் சேர்த்து களிம்பு போல் அரைத்து கொட்டிய இடத்தில் பற்று போட வலி நிற்பதோடு வீக்கமும் வற்றிப் போகும்.
மனிதர் கடியா?
அவுரி வேர் 15 கிராம். நன்னாரி 15 கிராம் இரண்டையும் அரைத்துக்
கடிவாயில் பூசி வரவும். கொல்லஸ் கோவைக் கிழங்கை அரைத்து கடிவாயில் பூசி வந்தாலும் குணமாகும்.
பாம்பு கடிக்கு…
தாமரைப் பூவின் அண்டாசயப் பகுதியுடன் சிறிது மிளகு சேர்த்து சாப்பிட பாம்புக்கடி விஷம் இறங்கி விடும்.
தேள் கடிக்கு…
புளியையும் சுண்ணாம்பையும் சம அளவு எடுத்து இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து பிசைந்தால் நெருப்பு போல் சூடேறும். அதை அப்படியே கொட்டுவாயில் வைத்தால் விஷமிறங்கும்.
எலிக் கடிக்கு…
எலிக்கடி இரைப்பு நோயை உண்டுபண்ணும். அதன் விஷத்தை முறியடிக்க நாயுருவி விதைகளைக் கொண்டு வந்து காய வைத்து பட்டு போல் இடித்து ஒருசிட்டிகையளவு எடுத்து தேனில் குழைத்து காலை, மாலை 20 நாள்கள் சாப்பிட குணம் தெரியும்.