‘சாமி’ ஆடிய ஐஸ்வர்யா ராஜேஷ்… முக்கியக் கதாபாத்திரத்தில் ஜொலிப்பாரா?

Saami 2 In the filmAishwarya Rajesh - 2026

15 வருட இடைவெளிக்குப் பின் வெற்றிப் படமான சாமி இரண்டாம் பாகமாக தயாராகியுள்ளது. இதில் முக்கிய அம்சம், முதல் படத்தில் ரவுண்டு கட்டிய திரிஷா, நடிக்க மறுத்து நடையைக் கட்டியதால், ஐஸ்வர்யா ராஜேஷ் சாமி ஆடியிருப்பதுதான்!

விக்ரம்-திரிஷா நடித்து 2003-இல் வெளியான ‘சாமி’, அன்றைய சூப்பர் ஹிட் மூவி. ஹரி இயக்கத்தில் இதன் இரண்டாம் பாகம் இப்போது தயாராகி வருகிறது. சாமி – 2 படப்பிடிப்பு 90 சதவீதம் முடிந்துள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் சம்பந்தமான காட்சிகளும் பாடல் காட்சியும் படமாகி வருகிறது.

இந்தப் படம் குறித்து இயக்குனர் ஹரி கூறியபோது,“சாமி படம் முதல் பாகத்தின் இறுதி காட்சியில் “சாமி வேட்டை தொடரும்” என்று முடித்திருந்தோம். அந்த வேட்டை இரண்டாம் பாகத்தில் தொடர்கிறது” என்றார்.

இந்தப் படத்தில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷை தேர்வு செய்தனர். திரிஷாவையும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்தனர்.

ஆனால் படப்பிடிப்பு தொடங்கியதும் திரிஷா திடீரென்று விலகினார். தன் கதாபாத்திரம் வலுவில்லாமல் உள்ளதாகக் கூறி அதில் நடிக்க மறுத்து விலகினார். இதனை அடுத்து திரிஷா மீது சாமி-2 படத்தை தயாரிக்கும் சிபு தமீம், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தார்.

சமரச முயற்சிகளை திரிஷா ஏற்கவில்லை. அட்வான்ஸ் பணத்தையும் திருப்பிக் கொடுத்து விட்டார். இதனால் படக்குழுவினர் திரிஷாவுக்கு பதில் ஐஸ்வர்யா ராஜேஷை ஒப்பந்தம் செய்து நடிக்க வைத்தனர்.

ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த வாய்ப்பு குறித்துக் கூறியபோது, “திரிஷா மறுத்ததால் அவரது கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். மணிரத்னம், வெற்றிமாறன், கவுதம் மேனன் இயக்கத்தில் நடித்து விட்டேன். ஹரி திரைக்கதையை விறுவிறுப்பாக நகர்த்துவார். அவர் இயக்கத்தில் விக்ரமுடன் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. எனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்” என்றார்.

தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இல்லை என்று சாமி ஆடினார் திரிஷா. அதே கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக இப்போது சாமியாடி வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories