50 சிறந்த கவிதைகளைத் தொகுத்து `தெய்வத்தின்டே மகள்’ என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டுள்ளார். அதில் இடம்பெற்றுள்ள கவிதைகள் மலையாள இலக்கிய உலகத்தினரால் விவாதிக்கப்பட்டு வருகின்றன. அந்தப் புத்தகத்தை சென்னைப் பல்கலைக்கழகத்தின் மலையாளத் துறையில் பயிலும் மாணவர்களுக்குப் பாடப்புத்தகமாக வைக்கப்பட்டுள்ளது.
கேரளாவுக்கு வெளியில் இருக்கும் பல்கலைக்கழகத்துக்கு அவரது புத்தகம் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருப்பதை மலையாள கவிஞர்கள் வரவேற்றுள்ளனர். பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத் தேர்வுக்குழுவில் இடம்பெற்றிருந்த கிரீஷ், மலையாளத்துறையின் தலைவரான பேராசிரியர் சந்தோஷ், சம்பிரிதா ஆகியோர், திருநங்கை விஜயராஜ மல்லிகாவின் புத்தகத்தை மூன்றாவது செமஸ்டர் பாடத்துக்குத் தேர்வு செய்துள்ளனர்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் தனது புத்தகம் பாடமாக வைக்கப்பட்டுள்ள நிலையில், அந்தப் பல்கலைக்கழகத்துக்கு நேரில் சென்று பார்வையிடவும் அவர் முடிவெடுத்திருக்கிறார். விரைவில் வெளியாக இருக்கும் புத்தகத்துக்கு `ஆண் நதி’ எனப் பெயரிட்டுள்ள அவர், `மல்லிகா வசந்தம்’ என்ற பெயரில் சுயசரிதையும் எழுதி வருகிறார்.