தென்காசி அருகே 3 பேரை கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கப் பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் நெட்டூரில் பேச்சித்தாய், அவரது மகள் மாரி, பேச்சித்தாய் தந்தை கோவிந்தசாமி ஆகியோரை படுகொலை செய்தார், நெட்டூரை சேர்ந்த முத்துராஜ் என்ற ஆண்டவர். இவர் மீதான வழக்கில், தென்காசி கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி விஜயகுமார் இன்று, தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அரசு சார்பில் வழக்கறிஞர் ராமசந்திரன் ஆஜர் ஆனார்.