இந்துமுன்னணி நெல்லை மண்டல பொதுக்குழுக் கூட்டம் சங்கரன்கோவிலில் இன்று தொடங்கியது.
மாநில துணைத் தலைவர் V.P.ஜெயக்குமார் தலைமையில் கூட்டம் தொடங்கியது. மதுரை உயர் நீதிமன்ற மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் V.கதிர்வேல், தொழிலதிபர்கள் ரமேஷ்பாபு, அருணாசலம் ஆகியோர் திருவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
மாநில இனை அமைப்பாளர் K.K.பொன்னையா, மாநில செயலாளர் கா.குற்றாலநாதன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். நெல்லை தூத்துக்குடி குமரி தென்காசி மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்!
- சங்கரன்கோவில் அபிஷேக கட்டணம் பல மடங்கு உயர்வு கண்டனம்.
- திருசெந்தூர் ஆலந்தலை இந்து மீனவர்கள் மீது கிறிஸ்தவர்கள் தாக்குதல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
- நெல்லை மானூர் கட்டாராங்குளம் போலி ஆவணம் போட்டு ஊர் நிலத்தை அபகரிக்க முயலும் கிறிஸ்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
- திருச்செந்தூர் கோவிலில் கட்டண தரிசனம் செய்வோருக்கு மட்டும் இலைவிபூதி லட்டு பிரசாதம் வழங்கும் பொருளாதார தீண்டாமைக்கு கண்டனம் – உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.