கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு சில மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடுமையான கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மதுரை தெற்குமாசி வீதியில் உள்ள ஆந்திர வங்கியில் பணியாற்றும் ஊழியருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
இதனால் வங்கி கிளைக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளித்து வங்கி கிளைகள் மூடப்பட்டுள்ளன. கொரோனா அதிகரிப்பால் மதுரையில் 20 வார்டுகள் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.