சென்னை செம்மஞ்சேரி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் 54 வயதான வர்கீஸ். இவரது 14 வயது மகள் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
சிறுமிக்கு வியாழக்கிழமை திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுமியை அவரது தந்தை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.
அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி 6 மாத கர்ப்பமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து செம்மஞ்சேரி போலீசாருக்கு மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த போலீசார் இச்சம்பவம் குறித்து கிண்டியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்தினர்.
மகளிர் போலீசார் சிறுமியிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
சிறுமி தனது கர்ப்பத்திற்கு காரணம் தனது தந்தை வர்கீஸ் தான் எனக் குறிப்பிட்டதும் போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
கடந்த 2 வருடங்களாக தன்னை வீட்டில் வைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் பகீர் புகாரைத் தெரிவித்தார்.
தான் கர்ப்பம் அடைந்ததை வெளியே யாரிடமும் சொல்லக்கூடது என்று மிரட்டி வைத்திருந்ததாகவும் வாக்குமூலம் அளித்த்தார்.
இதனையடுத்து சிறுமியின் தந்தை வர்கீஸை கிண்டி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பெற்ற தந்தையே மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.