சென்னை பல்கலை.யின் சான்றிதழ் பாதுகாப்பு கட்டணம் பல மடங்கு உயர்வு!

சென்னை :

வரலாற்றுப் பெருமை கொண்ட சென்னை பல்கலைக்கழகம் நிதி நெருக்கடியில் தவித்து வருகிறது. இதனை சமாளிக்க அரசு கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களிடம் சான்றிதழ் பாதுகாப்பு கட்டணத்தை 10 மடங்கு உயர்த்தியுள்ளது . மேலும் இப்படியே நிதி நெருக்கடி தொடர்ந்தால் பேராசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

சென்னை பல்கலைக்கழகம் 1857ஆம் ஆண்டு  உருவாக்கப்பட்டது.  5 குடியரசுத் தலைவர்களை உருவாக்கிய ஒரே பல்கலைக்கழகம் என்ற பெருமையைப் பெற்றது சென்னை பல்கலைக்கழகம். சிறப்பு பல பெற்ற இந்தப் பல்கலைக் கழகம், வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில்  தற்போது கடும் நிதிநெருக்கடியில் சிக்கியுள்ளது.

இதற்குக் காரணம் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி நிலையங்கள் மூடப்பட்டது தான் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் அரசுக் கல்லூரிகள் (15) மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள் (30) மேலும் சுயநிதி கல்லூரிகள் (115) என 150க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் செயல்படடு வருகின்றன. இதில் பயிலும் 1500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ் பாதுகாப்பு கட்டணமாக, அரசுக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு ரூ.1000-ம், அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு ரூ.2000 கட்டணமாக வசூலிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது

ஏற்கெனவே இந்தக் கட்டணம்  250 ரூபாயாக  இருந்தது. இப்போது, மேலும் பேரிடியாக இந்தக் கட்டணத்தை சென்னை பல்கலைக்கழக நிர்வாகம் பல மடங்கு உயர்த்த முடிவு செய்துள்ளது.  இந்தக் கட்டண உயர்வால் ஏழை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். தொலைதூர கல்வி நிலையங்கள் மூடப்பட்டதால் சென்னை பல்கலைக்கழகத்தின் வருமானம் குறைந்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories