புத்தாண்டு பிரார்த்தனைக்காக சர்ச்சுக்கு சென்ற 3 பயிற்சி நர்சுகள் வாகனம் மோதி பலி

ஸ்ரீபெரும்புதூர்:

புத்தாண்டு பிரார்த்தனைக்காக சர்ச்சுக்குச் சென்ற பயிற்சி செவிலியர்கள் நடந்து வந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி 3 நர்சுகள் பலியாயினர்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மேவலூர்குப்பத்தில் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. வேலூர் மாவட்டம் வாலாஜாவை அடுத்த செங்காடைச் சேர்ந்த கலையரசி (வயது 22), மேல்விசாரை சேர்ந்த குப்பு (22), ஆம்பூரை சேர்ந்த சரஸ்வதி (22) உள்ளிட்ட ஏராளமானோர் விடுதியில் தங்கி பயிற்சி நர்சுகளாக பணியாற்றி வந்தனர்.

புத்தாண்டு என்பதால், நேற்று நள்ளிரவு மேவலூர்குப்பத்தில் உள்ள சர்ச்சு ஒன்றில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள கலையரசி, குப்பு, சரஸ்வதி ஆகியோர் உடன் பணியாற்றும் தோழியருடன் சென்றனர். அதிகாலை 1 மணி அளவில் அவர்கள் பிரார்த்தனை முடித்து திரும்பினர். அவர்கள், சென்னை – பெங்களூர் சாலை ஓரத்தில் நடந்து வந்து கொண்டு இருந்தபோது சென்னை நோக்கிச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் திடீரென தாறுமாறாக ஓடி நர்சுகள் வந்த கூட்டத்துக்குள் புகுந்து விபத்தை ஏற்படுத்திச் சென்றது. இந்த விபத்தில் கலையரசி, குப்பு, சரஸ்வதி ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் உடன் சென்ற குடியாத்தத்தைச் சேர்ந்த கவிதா, தூத்துக்குடியைச் சேர்ந்த சரஸ்வதி, மாலா, கலையரசி ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

விபத்து ஏற்படுத்திய வாகனத்தில் வந்தவர்கள் தப்பிச் சென்று விட்டனர். தகவல் அறிந்து ஸ்ரீபெரும்புதூர் காவல் ஆய்வாளர் பாலு மற்றும் போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்த 4 பேரையும் மீட்டு அவர்கள் வேலை பார்த்த தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பலியான 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. நர்சுகள் பலியானது குறித்த செய்தி அறிந்ததும் உடன் பணியாற்றுபவர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்த விபரம் தெரியவில்லை. வாகனத்தை அடையாளம் காண சுங்கச்சாவடி மற்றும் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டு உள்ள கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

புத்தாண்டு பிரார்த்தனைக்கு சர்சுக்கு சென்ற 3 நர்சுகள் பலியான சம்பவம் அந்தப் பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Entertainment News

Popular Categories