கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

kadeswara subramaniam hindu munnani - 2026
hindumunnani

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

நேற்று (02.07.2026) தமிழக முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்களை கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்தித்து, கோவில் இடங்களை ஆக்கிரமித்த ஆக்கிரமிப்பாளர்கள், நீண்ட நாள் வாடகைகார்கள், குத்தகைதாரர்களுக்கு பட்டா வழங்கிட கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவில் வாடகை, குத்தகை என்பது சந்தை மதிப்பைவிட மிகமிகக் குறைவு. அந்த தொகையை கூட, ஆண்டு அனுபவிப்பவர்களில் பலர் பல ஆண்டுகளாக தராமல் ஏமாற்றி வருகிறார்கள்.

மேலும் கோவிலுக்குச் சொந்தமான சொத்துக்கள் யாவும் சட்டப்படி மைனர் சொத்து. அதாவது ஆலயத்தில் இறைவன் என்றும் இருக்கிறார் என்பது இந்துக்களின் நம்பிக்கை. கோவிலின் சொத்து என்பது அந்த கோவிலின் இறைவனின் பெயரில் இருக்கிறது. அதனைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும் அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தின் மூலம் கோவில் செலவுகளைச் செய்யவும் ஏற்படுத்தப்பட்டது தான் இந்து சமய அறநிலையத்துறை ஆகும். எனவே இறைவனின் சொத்திற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது, கூடாது. அப்படி கொண்டாடினால் அது சட்ட விரோதம் ஆகும். மேலும் ஏழைகளுக்கு தருவதற்கு என்று கம்யூனிஸ்ட்கள் கூறுவார்களேயானால், கம்யூனிஸ்ட் கட்சிக்கு இருக்கும் சொத்துக்களை ஏழைகளுக்குப் பிரித்து பட்டா தந்து முன்மாதிரியாக அக்கட்சி விளங்கலாமே!

கம்யூனிஸ்ட் அலுவலகங்கள் கார்ப்பரேட் மாளிகைகளாக பல நூறு கோடி ரூபாய் வருமானம் ஈட்டி வருகின்றன. இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு ஜாதியைக் காரணம் காட்டி வாடகைக்குக் கூட இடம் தர மறுத்தவர்கள்தான் இந்த கம்யூனிஸ்ட்கள்.

ALSO READ:  பக்தர்கள் திரளில் மதுரை - வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

நமது நாட்டில் மத்திய, மாநில அரசுகளுக்கு அடுத்தபடியாக அதிக சொத்துக்கள் இருப்பது வக்ஃப் வாரியம் எனும் மசூதி சொத்தும், கிறித்துவ மிஷனரி எனும் சர்ச்சுக்களுக்கு சொந்தமான சொத்துக்கள் தான். எனவே அவற்றில் வாழும் மக்களுக்கு பட்டா வழங்க கம்யூனிஸ்ட்கள் கோரலாமே? அதைப்பேச மாட்டார்கள். பேசினால் கம்யூனிஸ்ட்களின் கூட்டணி கட்சிகளான சிறுபான்மை மக்களிடம் ஓட்டு பிச்சையெடுக்கும் கட்சிகளே எதிர்க்கும்.

கோவில் சொத்து என்பது பணக்காரர்கள், மன்னர்கள் கொடுத்தது என்று பலரும் நினைக்கிறார்கள். சாதாரண மக்கள் பலரும் கோவிலுக்கு தங்களுக்கான சொத்துக்களை எழுதி கொடுத்துள்ளார்கள். காரணம் இறைவன் மீதான பக்தி மற்றும் வேண்டுதல். உதாரணமாக ஆயுள் தண்டனை கைதியாக இருந்த ஒருவர் மனம் திருந்தி பின்னாளில் கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தில் சென்னை அடையாறில் சொத்து வாங்கி அதனை திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரருக்கு எழுதி வைத்த இடம் தான் இன்று ஆக்கிரமிப்பில் உள்ள அடையாறு அருணாசலபுரம் பகுதி.

இன்று அதன் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய். அந்த சொத்து முழுவதும் ஆக்கிரமிப்பில் இருக்கிறது. எனவே பக்தர்கள் கோவிலின் அன்றாட பூஜை, விசேஷ கால பூஜைகள், திருவிழாக்கள், அன்னதானம் என பலவற்றை நடத்துவதற்காக என்று குறிப்பிட்டே சொத்துக்களை எழுதி வைத்துள்ளார்கள். அந்த பக்தர்களின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கும் கோவில் நிர்வாகத்தை ஏற்று இருக்கிற இந்து சமய அறநிலையத் துறைக்கும், அந்த கோவிலில் உள்ள இறைவனை வழிபடும் பக்தர்களாகிய நமக்கும் இருக்கிறது.

ALSO READ:  வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

இதனை கம்யூனிஸ்ட் போன்ற சந்தர்ப்பவாத பகல் கொள்ளைகாரர்கள் திருடி சுருட்டுவதை வேடிக்கை பார்த்தால் அந்தப் பாவம் நமக்கும் வந்து சேரும். எனவே மக்களிடையே பேராசையை வளர்த்து கோவில் சொத்துக்களை கபளீகரம் செய்திட தூண்டிவிடும் மக்கள் விரோத கம்யூனிஸ்ட்களிடம் தமிழக முதல்வர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சட்டத்திற்கு விரோதமாக, தர்மத்திற்கு எதிரான செயல்களுக்கு தமிழக அரசு துணைபோகக்கூடாது என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

இரண்டாம் சுற்றான ரவுண்ட் 32 ஜூன் 28ஆம் தேதி தொடங்கி, ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

பஞ்சாங்கம் ஜூலை 03 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

ஏ.வி.ஆர் ஸ்வாமியின் மறைவு ஒரு பொற்காலத்தின் முடிவைக் குறிக்கிறது. தில்லை திருச்சித்ரகூடமான சிதம்பரம் திருத்தலத்திற்கு அவர் ஆற்றிய கைங்கரியங்களும் அவரது நூல்களும் என்றும் நிலைத்து நின்று நல்வழிப்படுத்தும்.

Topics

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

இரண்டாம் சுற்றான ரவுண்ட் 32 ஜூன் 28ஆம் தேதி தொடங்கி, ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

பஞ்சாங்கம் ஜூலை 03 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

ஏ.வி.ஆர் ஸ்வாமியின் மறைவு ஒரு பொற்காலத்தின் முடிவைக் குறிக்கிறது. தில்லை திருச்சித்ரகூடமான சிதம்பரம் திருத்தலத்திற்கு அவர் ஆற்றிய கைங்கரியங்களும் அவரது நூல்களும் என்றும் நிலைத்து நின்று நல்வழிப்படுத்தும்.

குமரியில் மட்டும் ஏன் இப்படி ‘பகீர்’ புரளிகள்?

குமரி மாவட்டத்தின் சில கடற்கரை கிராமங்களில் கடற்கரை மணலில் மோனோசைட் போன்ற கனிமங்கள் இயற்கையாகவே கலந்துள்ளன. இந்தக் கனிமங்கள் இருப்பதால் அந்தப் பகுதியில் புற்றுநோய் அதிகமாக வருகிறது என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால், அந்தக் குறிப்பிட்ட காரணம் அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட முடிவாக நிரூபிக்கப்படவில்லை.

மதமாற்ற விவாதம் … மீண்டும்!

மத்திய உள்துறை அமைச்சரகம் கடந்த வாரம் வெளிநாட்டு நன்கொடை (FCRA) விதிகளில் சில திருத்தங்களை அறிவித்துள்ளது. வெளிநாட்டிலிருந்து நன்கொடை பெறும் என் ஜி ஓ க்களின் ( அரசு சாரா அமைப்புகள்) செயல்பாடுகளை வரைமுறை படுத்துவது அதன் நோக்கம்.

பஞ்சாங்கம் ஜூலை 02 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories