― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகிரைம் நியூஸ்சகமாணவனைக் குத்தி அடித்துக் கொலை ! சகமாணவன் வெறிச்செயல்!

சகமாணவனைக் குத்தி அடித்துக் கொலை ! சகமாணவன் வெறிச்செயல்!

- Advertisement -

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கால்ப் மைதானம் அருகே ஒரு பிரபல தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இருவருக்குள் நடந்த தகராறு, கொலைவரை சென்றுவிட்டது. கபில் ராகவேந்திரா மற்றும் இன்னொரு மாணவர், இருவருமே ஒரே வகுப்பில் பயில்பவர்கள்.

இதில் இன்னொரு மாணவர், ராஜபாளையத்தை சேர்ந்தவன். கபில் ஓசூரை சேர்ந்தவன். இந்த பள்ளிக்கென்று தனியாக ஒரு மாணவர் விடுதி உள்ளது. இவர்களுக்குள் என்ன பிரச்னை என்ற முழு விவரமும் தெரியவில்லை. ஆனால் நேற்றிரவு கூட இருவருக்கும் சண்டை ஏற்பட்டிருக்கிறது. அது இன்று காலைவரை தொடர்ந்துள்ளது.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த இன்னொரு மாணவர், கபில் ராகவேந்திராவை கத்திரிக்கோலால் குத்தி கிழித்து தாக்கி உள்ளான். மேலும் கிரிக்கெட் ஸ்டெம்பாலும் அவன் மண்டையிலேயே மிக மோசமாக தாக்கியும் உள்ளான். இதில் கபில் ராகவேந்திரா ரத்த வெள்ளத்தில் அங்கேயே உயிரிழந்து விட்டான்.

இச்சம்பவம் இன்று காலை நடந்துள்ளது. இது குறித்து தாக்குதலில் ஈடுபட்ட அந்த மாணவரை கொடைக்கானல் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கபில் ராகவேந்திராவின் உடல் பிரேத பரிசோதனைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காவல்துறை சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று, கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு மாணவனை இன்னொரு மாணவனே இவ்வளவு கொடூரமாக கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version