அறந்தாங்கி: அறந்தாங்கியில் வர்த்தக சங்கத்தின் சார்பில் கரோனா மற்றும் டெங்கு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.
விழிப்புணர்வின் மூலம் மக்கள் கூடும் இடங்களில் கலை நிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் கரோனா நோய் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க அரசின் சார்பில பல முயற்சிகள்எடுத்து வரும் நிலையில் அறந்தாங்கியில் வர்த்தக சங்கத்தின் சார்பில் கலை நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு அறந்தாங்கி சப் கலெக்டர் ஆனந்த்மோகன் தலைமை வகித்தார்.
வர்த்தக சங்க தலைவர் வரதராஜன் நகராட்சி கமிசினர் பாஸ்கரன் தாசில்தார் மார்டின் லுாதர் கிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர் நிகழ்ச்சியில் கலைக்குழுவினர் பாடல் மூலம் விழிப்புணர்வினை ஏற்படுத்தினர்