― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

HomeReporters Diaryகடலோரங்கள் வழியாக தேசவிரோதம்!  தமிழகத்தில் தலைதூக்கும் வாடிகனின் சதி!

கடலோரங்கள் வழியாக தேசவிரோதம்!  தமிழகத்தில் தலைதூக்கும் வாடிகனின் சதி!

IMG 20180522 WA0059

கடலோரங்கள் வழியாக தேசவிரோத சக்திகள்;  தமிழகத்தில் தலைதுாக்கும் வாடிகனின் சதி!
*
இந்தியாவில் காங்கிரஸ் தலைமையிலான கிறிஸ்தவ ஆதரவு அரசு இருந்தால்தான், இந்தியாவில் மதமாற்றத்தையும், கோல்மால் பணப்பரிமாற்றங்களையும், அரசியல் – பொருளாதாரத்தில் கிறிஸ்தவ ஆதிக்கத்தையும் தொடர முடியும் என்பதுதான், வாடிகனின் நிரந்தர செயல்திட்டம்.
இதற்காக இந்திய அரசியலில் வாடிகன் எப்படியெல்லாம் தலையிட்டது என்பதற்கு சில சமீபகால உதாரணங்கள் :

1. கடந்த லோக்சபா தேர்தல் வேளையில் மோடி தலைமையில் பாஜ எழுச்சிபெற்று வந்தபோது, மோடி மற்றும் பாஜவுக்கு எதிராக பல கிறிஸ்தவ பாதிரியார்கள் வெளிப்படையாகவே அறிக்கை வெளியிட்டனர்.

ஒரு சான்று : மும்பை செயின்ட் சேவியர் கல்லுாரி முன்னாள் முதல்வரான ‘பாதர்’ பிரேஸர் மஸ்செரான்ஹஸ், ‘பாஜவுக்கு கிறிஸ்தவர்கள் ஓட்டளிக்க வேண்டாம்’ என்ற பகிரங்க அறிக்கை வெளியிட்டார்.

2. குஜராத்தில் 2017 டிசம்பரில் நடந்த சட்டசபை தேர்தல் வேளையில், காந்திநகர் ஆர்ச்பிஷப் தாமஸ் மக்ரான், ‘தேசியவாத (பாஜ) சக்திகளை வீழ்த்துங்கள்’ என்று பகிரங்க அறிக்கை வெளியிட்டார்.

3. கர்நாடகாவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலுக்கு முன், ‘லிங்காயத்துகளை இந்து மதத்தில் இருந்து பிரித்து இந்து ஓட்டுவங்கியை சிதறடிக்க வேண்டும்’ என்று வாடிகனின் ‘துாதர்’ சோனியாவே அங்கிருந்த காங்கிரஸ் அரசு விஐபிகள் மற்றும் லிங்காயத்துகளில் விலைபோன சிலருடன் நேரடியாகப் பேசி அதற்கான நடவடிக்கையைச் செயல்படுத்தினார்.
*
இதே பாணியிலான சதி திட்டத்தை–
வரும் 2019 லோக்சபா தேர்தலிலும் அரங்கேற்றும் செயல்திட்டத்தை, வாடிகன் இப்போதே தொடங்கி விட்டது.

இதன் முதல்கட்ட நடவடிக்கைதான், டில்லி ஆர்ச்பிஷப் அனில் கூடே கடந்த 8ம் தேதி வெளியிட்ட ‘நாட்டுக்கான ஓராண்டு பிரார்த்தனை மற்றும் வெள்ளிக்கிழமை உபவாசம்’ அறிவிப்பு. அந்த அறிவிப்பு, டில்லி ஆர்ச் டயோசீஸின் எல்லா சர்ச்களிலும் ஞாயிற்றுக்கிழமையன்று வாசிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பில்,‘2019ல் புதிய அரசு அமைவதற்காகத்தான் இந்த பிரார்த்தனை’ என்ற விளக்கம் இருக்கிறது!

அனில் கூடே அறிவிப்புக்கு ஆர்எஸ்எஸ், பாஜ மற்றும் இந்து அமைப்புகள் கடும் கண்டனம் வெளியிட்டன.

அதே வேளையில்– இந்திய கத்தோலிக்க பிஷப்கள் கூட்டமைப்பு தலைவர் ஆஸ்வால்டு கிரேசியஸ் உள்ளிட்ட பல பாதிரியார்களும் அனில் கூடே அறிவிப்பை வரவேற்றனர்.

போப்பின் அதிகாரப்பூர்வ மீடியாவான வாடிகன் நியூஸ் இணைய தளத்தில், ‘Delhi archdiocese launches prayer and fast campaign for India’ என்ற தலைப்பில் மே 16ம் தேதி வெளியான செய்தியில், அனில் கூடே அறிவிப்புக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்தே, அனில் கூடேவை ‘ஏவி’விட்டதே வாடிகன்(போப்)தான் என்பது வெளிப்பட்டிருக்கிறது.
*
2019 லோக்சபா தேர்தலுக்கான வாடிகனின் சதி திட்டத்தை, இப்போதே மிகத்தீவிரமாகத் தொடங்க, இந்தியாவில் மிகவும் சாதகமான பகுதி என்று, தமிழகத்தை தேர்வு செய்துள்ளனர். இந்த சதி திட்ட நடவடிக்கையை, தூத்துக்குடி ஸ்டெர்லைட் கலவரம் மூலம் தொடங்கி வைத்துள்ளனர்.

தூத்துக்குடியில் மே 22ம் தேதி நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட 100வது நாளில் நடந்த கலவரம், வாடிகன் கூலிப்படைகள் திட்டமிட்டு அரங்கேற்றியதுதான்!
இதற்கு – மோகன் லாசரஸ் பேச்சு, மே 22ல் போலீசைத் தாக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்யும் பெண்களின் பேச்சு என பல வீடியோ ஆதாரங்களே உள்ளன.

மேலும், துப்பாக்கி சூடுக்குப் பின், காங்கிரஸ் தலைவர் ராகுலும் குலாம் நபி ஆசாத் போன்ற காங்கிரஸ் பிரமுகர்களும் ‘இது அரச பயங்கரவாதம்’; ‘ஆர்எஸ்எஸ் சதி’ என்றெல்லாம் அபாண்டமாகக் குற்றம்சாட்டினர்; அவர்களின் ‘தோழமை’யான இங்குள்ள திமுக, கம்யூ., மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும், வாடிகனின் கூலிப்படைகளும், மோடி – பாஜ – ஆர்எஸ்எஸ் மீது பாய்ந்தன;

சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட காங்., ஆதரவாக உள்ள சில கட்சிகளின் தலைவர்களும் இதே பாய்ச்சலில் ஈடுபட்டன.
*
‘வாடிகன்’ கும்பல், தங்களது 2019 தேர்தல் உள்நோக்க சதிக்கு, தமிழகத்தை பிரதான களமாகத் தேர்வு செய்திருப்பதற்கு 2 காரணங்கள் :

1. தமிழகத்தில் கடலோரப் பகுதியில் கிறிஸ்தவர்கள் அதிகம்;

2. தமிழகத்தில் ஜெ., மறைவுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள அரசியல் தலைமை வெற்றிடம்.

ஜெ., மறைவுக்குப் பிறகுதான், தமிழகத்தில் திடீர் திடீரென பல போராட்ட அமைப்புகள், புற்றீசல் போல் தலைதுாக்கி வருகின்றன.
வாடிகனின் துாண்டுதல்படி மோகன் லாசரஸும் ஜெகத் கஸ்பரும்தான், இங்குள்ள பல கிறிஸ்தவப் பிரிவுகளின் பாதிரியார்களைக் கைகோர்க்க வைத்து, இந்த போராட்ட அமைப்புகளை திடீர் திடீரென உருவாக்கி, ஒருங்கிணைத்து, திடீர்திடீரென போராட்டங்களில் ஈடுபட வைக்கின்றனர்.

முஸ்லிம்கள், நக்சலைட்கள், கம்யூனிஸ்ட் ஆதரவாளர்கள், தமிழ்த் தேசிய ஆதரவாளர்கள், திரைத்துறையினர், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், டிவி சேனல்காரர்கள் என பல தரப்பினரையும், பல வகையிலும் ‘கவனிப்பு’ செய்து வளைத்து, இந்த திடீர் போராட்ட அமைப்புகள் உருவாக்கப்படுகின்றன.

எல்லா போராட்டங்களிலும் மோடி – பாஜ – ஆர்எஸ்எஸ் எதிர்ப்புதான் பிரதான கோஷமாக முழக்கப் படுகிறது.

கடல்வழி கடத்தல் கோல்மால் கும்பல்களுக்கு கடலோர சர்ச்களின் ஆதரவு தேவைப்படுவதால், அவர்கள் சர்ச்களின் ‘ஆர்டர்’ படி, போராட்ட அமைப்புகளுக்குத் தேவையான பண வசதி, போராட்ட வேளை சாப்பாடு வசதிகளைச் செய்து கொடுக்கின்றனர்.

சென்னையில் லயோலா கல்லுாரியிலும், மயிலாப்பூர், அயனாவரம் மற்றும் வேளச்சேரியில் உள்ள ‘அமைப்பு’ அலுவலக இடங்களிலும், அடிக்கடி மெரினா கடற்கரை மற்றும் ஈசிஆர் பகுதியிலும், இந்த போராட்ட அமைப்புகளின் ‘ஆலோசனை’ கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
*
வாடிகன் துாண்டுதலால் உருவாக்கப்படும் போராட்டக் குழுக்களின் போராட்ட வியூகம், எல்லா பகுதிகளிலும் ஒரே வகையில்தான் இருக்கின்றன. காரணம் : அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள ‘ஸ்கிரிப்ட்’டில், ‘மாசேதுங் வழிமுறை’ வலியுறுத்தப்பட்டுள்ளது!.
போராட்ட அமைப்புகளின் கூட்டங்களில் வலியுறுத்தப்படும் மாசேதுங்கின் போராட்ட வழிமுறைகள் : ‘மக்கள் போராட்டங்களில், தன்னை தலைவனாக முன்னிறுத்த ஒருவன் முயற்சித்தால், அவன் பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்; முகமற்ற போராட்டமே, வெற்றிக்கான பாதை; ஆட்சிக்கு எதிரான போராட்டத்திற்கு, தலைவன் இல்லாத இயக்கங்களை உருவாக்குவதே மிகச்சிறந்த உத்தி.

வெற்றியை சாதிக்க, முகமற்றவர்களாக இருங்கள்’.
இதை, ‘In mass revolution, if anyone tries to project himself as a leader, he will face problems.Faceless agitation is the path to victory.Creating leaderless movement is the best strategy to revolt against the establishment. Toachieve victory, go faceless’ என்று ஆங்கிலத்திலும் உணர்ச்சிகரமாகப் பேசுகிறார்கள்.
*
சென்னையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம், கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த இனையம் துறைமுகம் எதிர்ப்பு போராட்டம் மற்றும் ஒக்கி புயல் நிவாரண போராட்டம், துாத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் ஆகிய, சமீபகால போராட்டங்கள் அனைத்துமே, எந்த ஒரு அமைப்பு பெயரிலோ, எந்த ஒரு தலைவரின் பெயரிலோ இல்லாமல், ‘முகமற்ற’ போராட்டமாகவே – ஒரே பாணியில் – நடந்திருப்பது, கவனத்திற்குரியது.

(சென்னையில் ஐபிஎல் எதிர்ப்பு போராட்டத்திற்கு யாரும் கட்சிக் கொடி, பேனர் ஏந்தி வரவேண்டாம் என்று, வாடிகன் கும்பலால் திடீரென உருவாக்கப்பட்ட தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவையின் தலைவரான டைரக்டர் பாரதிராஜா அறிவித்தார். ஆனால், சீமான் உள்ளிட்ட சிலரது கட்சியினர் போராட்டத்திற்கு கொடி பிடித்து வந்தனர். போராட்ட வேளையில் கலவரம் நடந்தது. பின்னர், கொடி பிடித்து வந்தது தவறு என்று பாரதிராஜா – ‘உஷாராக’– கண்டித்தார்) .

போராட்ட வேளையில் மக்களோடு மக்களாக ஊடுருவும் ‘வாடிகன் கூலிப்படை’களான கிறிஸ்தவ போராட்ட அமைப்புகளின் உறுப்பினர்கள், ஜீன்ஸ் பேன்ட் – டி சர்ட்; வேட்டி – டி சர்ட் அணிந்து, முகத்தை கர்ச்சீப்பால் மூடிக் கொண்டு, போலீசாரை சுற்றி வளைத்து தாக்குவார்கள்; போலீஸ் வாகனங்களுக்கு தீ வைப்பார்கள்; இதன்மூலம் போலீசாரிடம் ஆவேசத்தைத் துாண்டி, கடும் பதிலடியை (தடியடி / வீடுவீடாக ரெய்டு /துப்பாக்கிச்சூடு) நடத்த வைப்பார்கள்.

அதில் நடக்கும் பலிகள், படுகாயம் போன்ற விவகாரங்களை வீடியோ எடுத்து, மோடி – பாஜ எதிர்ப்பு பிரச்சாரத்தை சமூக வலைதளங்களில் தீவிரமாகப் பரப்புவார்கள். ஜல்லிக்கட்டு போராட்டம் முதல் துாத்துக்குடி போராட்டம் வரை, இதே பாணி தொடர்கிறது.
*
இதற்கிடையில், கடந்த ஆண்டு பதட்டத்தை ஏற்படுத்திய நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டத்தை, அனிதா என்ற மாணவியின் மர்ம மரணத்தால் பெரிதுபடுத்தினர். எம்பிபிஎஸ் சீட் கிடைக்காத அனிதா, பின்னர் பிஇ விவசாயம் படிக்க முடிவு செய்திருப்பதாக பேட்டியளித்த நிலையில், திடீரென மர்மமாக இறந்தார். அந்த மர்மம் இன்னும் விடுபடவில்லை.

சென்னையில் ஜெகத்கஸ்பர் மே 24ம் தேதி நடத்திய பிரஸ் மீட்டில் விநியோகித்த அறிக்கையில்,
‘தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில், ஸ்னோலின் என்ற மாணவி இறந்தார். அதை ஏன் மீடியாக்கள் பெரிதுபடுத்தவில்லை?’ என்று அதிர்ச்சி வெளியிட்டிருக்கிறார்.

இந்த இரு நிகழ்வுகளில் இருந்தே, போராட்டத்தில் வன்முறை – பலிகளை ஏற்படுத்தி, அதை வைத்து ‘மரண அரசியல்’ செய்வதுதான் வாடிகன் கும்பலின் ஒரு முக்கிய உத்தி என்பது வெளிப்பட்டிருக்கிறது.
*
ஜெகத் கஸ்பர் மே 24ல் சென்னையில் நடத்திய பிரஸ்மீட்டில், ஒரு அபாயகரமான புதிய டிரன்ட்டும் தொடங்கியிருக்கிறது. அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் தமிழகக் கிளை ஒருங்கிணைப்பாளரான தாமஸ் பிராங்கோவும் அந்த பிரஸ்மீட்டில் கலந்து கொண்டார்; அவரை ‘குமரி மாவட்ட மக்கள் பிரதிநிதி’ என்று கஸ்பர் அறிமுகப்படுத்தினார்; பிரஸ்மீட்டுக்குப்பின் ஸ்டெர்லைட் போராட்டங்களில் தங்களது கூட்டமைப்பும் பங்கேற்கும் என்று தாமஸ் அறிவித்து, அதுகுறித்த செய்திக் குறிப்பையும் விநியோகித்தார்.

அரசுத் துறை தொழிற் சங்கங்களையும் வாடிகன் கும்பல் வளைப்பது, வருங்காலத்தில் மிகப்பெரிய பிரச்னைகளை ஏற்படுத்தும்.

இதெல்லாம், தமிழக உளவுத்துறை / மத்திய உளவுத்துறைக்கு தெரியவில்லையா? தெரிந்தும் நடவடிக்கை எடுக்க முடியாமல் அவர்களது கைகள் கட்டப் பட்டுள்ளதா? என்பதெல்லாம் பெரிய கேள்விக்குறி.
ஆனால் –இந்த அட்டூழியங்களில் கடும் நடவடிக்கை இல்லாத அலட்சியம் தொடர்ந்தால், தேசநலனுக்கு பேராபத்து என்பது மட்டும் உறுதி.

* வாடிகன் சதியில் ஆதரவாக கைகோர்த்துள்ள தமிழகக் கட்சிகள் / அமைப்புகள் : திமுக, விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூ., மார்க்சிஸ்ட், தமிழக வாழ்வுரிமை கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்…
இந்தக் கட்சிகளின் வலுக்கட்டாயத்தால், தமிழக விவசாய அமைப்புகளும் வணிகர் அமைப்புகள் போன்ற சில அமைப்புகளும் இவர்கள் நடத்தும் போராட்டத்தில் பங்கேற்று வருகின்றன.

* வாடிகனால் உருவாக்கப்பட்ட அமைப்புகளில் சில :
1. ‘நாம்’, 257, 2வது தளம், அங்கப்ப நாயக்கன் தெரு, பிராட்வே, சென்னை. (ஒருங்கிணைப்பாளர் = ஜெகத் கஸ்பர்) போன் : 044 – 2499 0201. இந்த அமைப்பின் தமிழக அளவிலான பெயர், ‘நாம் தமிழக மக்கள்’; மாவட்டங்களில் ‘நாம் குமரி தமிழக மக்கள்’, ‘நாம் துாத்துக்குடி தமிழக மக்கள்’ என்றெல்லாம் தனிப்பட்ட பெயர்கள் உள்ளன.

2. தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டு பேரவை. இதன் தலைவர், இயக்குனர் பாரதிராஜா. இதில் திரைத்துறையினரும், சீமானின் நாம் தமிழர் கட்சி, எஸ்டிபிஐ ஆகிய கட்சி/அமைப்புகளும் இடம்பெற்றுள்ளன.

3. ‘தமிழன்’, ‘கலாம் நண்பர்கள்’ உள்ளிட்ட பல இணையதளக் குழுக்கள். இந்த குழுக்கள்தான், போராட்டத் தகவல்களை சமூக வலைதளங்கள் மூலம் பரப்புகின்றன.

* வாடிகன் கும்பல்களுடன் நெருக்கமாக செயல்படும் அமைப்புகளில் சில :

1. தமிழ்த் தேசியப் பேரியக்கம் (மணியரசன் குழு); போன் : 76670 77075; 98408 48594. இந்த குழு, கண்ணோட்டம், தமிழ்த் தேசியம் என்ற வேறு பெயர்களிலும் இயங்குகிறது.

2. இளந்தமிழகம், 2, எத்திராஜ் வளாகம், 5வது முதன்மை சாலை, விசயநகர், வேளச்சேரி. போன் : 8939661119.

3. மே 17 இயக்கம்(திருமுருகன் காந்தி கும்பல்). போன் : 98840 72010. இந்த இயக்கம், தன்னாட்சி தமிழகம் என்ற வேறு பெயரிலும் இயங்கி வருகிறது; இந்த அமைப்பின் போன் : 8610047602; 9884155289.

4. தேசிய மனித உரிமைக் கூட்டமைப்பு. தலைவர் : பேராசிரியர் அ.மார்க்ஸ். இதன் தலைமையகம் டில்லி ஜங்பூர் போகால் பகுதியில் உள்ளது. போன் : 9489871185.

5. தமிழ்நாடு பரதர் நல பேரவை.

6. நாடுகடந்த தமிழீழ அரசு. (இந்த ‘அரசு’, கடந்த பொங்கல் வேளையில், திருவண்ணாமலையில் விளையாட்டு போட்டிகள் – விருதுவிழாவை பகிரங்கமாக நடத்தி, நாடுகடந்த தமீழீழ அரசால் தமிழகத்தில் நடத்தப்பட்ட முதல் பெருவிழா என்று பெருமிதப்பட்டது!).

7. மக்கள் கலை இலக்கியக் கழகம். இது நக்சலைட் கும்பல். ‘வினவு’ என்ற பெயரிலும் இயங்கி வருகின்றனர்.

8. அறப்போர் இயக்கம்.

9. மக்கள் அதிகாரம் அமைப்பு.

10. உலகத் தமிழர் பேரவை, பிரிசிஸன் பிளாஸா, தேனாம்பேட்டை, சென்னை. போன் :98416 88937.
10. ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தின் ‘மக்கள் பாதை’ அமைப்பு.

Source: வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூகத் தளங்களில் வைரலாகப் பரவிவரும் கருத்து.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Exit mobile version