We have a curated list of the most noteworthy news from all across the globe. With any subscription plan, you get access to exclusive articles that let you stay ahead of the curve.
We have a curated list of the most noteworthy news from all across the globe. With any subscription plan, you get access to exclusive articles that let you stay ahead of the curve.
We have a curated list of the most noteworthy news from all across the globe. With any subscription plan, you get access to exclusive articles that let you stay ahead of the curve.
We have a curated list of the most noteworthy news from all across the globe. With any subscription plan, you get access to exclusive articles that let you stay ahead of the curve.
சிவகாசி அருகே பட்டாசு ஏஜென்டிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் போல் நடித்து ரூ.10 லட்சம் மோசடி செய்த 4பேரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டி ராமச்சந்திரா புரத்தைச் சேர்ந்தவர் சௌந்தரராஜன் (வயது45) பட்டாசு ஏஜென்ட்டாக உள்ளார். இவரிடம் தாயில்பட்டி கோட்டையூரைச் சேர்ந்த கருப்பசாமி (55) சாத்தூர் அருகே இருக்கன்குடியைச் சேர்ந்த ரமேஷ் ( 38 ) சாத்தூர் அருகே வேப்பிலைபட்டியை சேர்ந்த சுப்பிரமணியன் ( 40 )கார் டிரைவர் சாத்தூர் அருகே இராமலிங்கபுரத்தைச் சேர்ந்த மகேஷ்குமார் (47) ஆகியோர் கடந்த 6 ஆம் தேதி வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்து ரூ.10 லட்சம் வாங்கியுள்ளனர் .
கடந்த மூன்று நாட்களாக கூடுதலாக 10 லட்சம் கேட்டு சௌந்தரராஜனை மிரட்டி வந்துள்ளனர்.
இது குறித்து சிவகாசி டிஎஸ்பி அலுவலகத்தில் சௌந்தரராஜன் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட கருப்பசாமி தாயில்பட்டி கோட்டையூர் கிளை திமுக., பிரதிநிதியாகவும், ரமேஷ் சாத்தூர் திமுக., இளைஞரணி நிர்வாகியாகவும் உள்ளனர்.
அச்சுறுத்தும் தகவல்- குறைந்து வரும் இந்துக்களின் ஜனத்தொகை; ஏற்படும் ஆபத்துகள்… குறித்து இந்து முன்னணி எச்சரிக்கை செய்வதாக, இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:
பாரதப் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு சமீபத்தில் 167 நாடுகளில் ஓர் ஆய்வை நடத்தியுள்ளது. 1950 முதல் 2015ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பெரும்பான்மையான சமூகத்தின் ஜனத்தொகையை பற்றிய ஆய்வு மேற்கொண்டது. அதில் இந்தியாவில் பெரும்பான்மையாகிய இந்துக்களின் ஜனத்தொகை 8% சரிந்துள்ளது என்ற விவரம் தெரிய வந்துள்ளது.
அதேசமயம் பிற சமூகத்தினர் ஜனத்தொகை அபரிமிதமாக நினைத்து பார்க்க முடியாத அளவு உயர்ந்துள்ளது.
குறிப்பாக முஸ்லிம்களின் மக்கள் தொகை 43% அதிகரித்துள்ளது. கிறித்துவர்களின் மக்கள் தொகை 5.38 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் மதமாறிய பிறகும் இந்துக்களின் பட்டியலில் போலியாக தொடரும் கிறிப்டோ கிறித்துவர்கள் அடக்கமா என்பது தெரியவில்லை.
இந்த ஆய்வில் அதிர்ச்சி தரும் தகவல் என்னவெனில், ஒட்டுமொத்த உலக சமூகங்களில் கடந்த 65 ஆண்டுகளில் எல்லா நாடுகளிலும் இந்துக்கள், ஜைனர்கள், பார்சிகள் எண்ணிக்கை சரிவை சந்தித்துள்ளது கவலை அளிக்கும் விஷயம்.
பெரும்பான்மையான இந்துக்களின் ஜனத்தொகை 8 சதவீதம் குறைவது என்பது எண்ணிக்கையில் பெரிய சரிவு என்பதை இந்துக்கள் உணர வேண்டும். இது தேசத்தின் மக்கள் சமநிலையை பெரிதும் பாதிக்கும். ஜனநாயகத்தில் இந்துக்களின் பிரதிநிதித்துவம் இழக்க நேரிடும் என்ற அபாயத்தை கவனிக்க வேண்டும்.
அதுபோல எங்களுக்கு ஒரு குழந்தை என பெருமை பேசுபவர்கள், தங்களின் குடும்பம் ஒரே தலைமுறையில் 50 சதவீதம் குறைந்து, அதன் அடுத்த தலைமுறை ஒட்டுமொத்தமாக காணாமல் போகும் என்பதை உணர வேண்டும்.
மேலும் தேசத்தின் பாதுகாப்பு அமைப்புகளான இராணுவத்திற்கோ, காவல்துறைக்கோ சேவை செய்ய முன்வருவோரில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்துவிடும் ஆபத்தை உணர வேண்டும்.
அதேசமயம் சிறுபான்மையினரான முஸ்லிம்களின் ஜனத்தொகை 43 சதவிகிதம் உயர்ந்துள்ளதும் ஆபத்தானது. எங்கெல்லாம் முஸ்லிம்களின் ஜனத்தொகை பத்து சதவீதத்தை தாண்டுகிறதோ அந்நாடுகளில் ஏற்பட்டுள்ள அழிவை, ஆபத்தை கவனித்தால் அந்நிலை பாரதத்திற்கும் வரும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பது எச்சரிக்கும் செய்தியாகும்.
மக்கள் தொகை குறைந்தால் இந்துக்கள் தங்களது பிரதிநிதித்துவத்தை இழந்து விடுவோம். உதாரணமாக கேரள் மாநிலத்தில் இந்துக்கள் அதிகமாக வாழும் பாலக்காடு மாவட்டத்தில் தொகுதி சீரமைப்பினால் ஒரு தொகுதி குறைந்தது. அதேசமயம் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மலப்புரம் மாவட்டத்தில் ஒரு தொகுதி அதிகமாக்கப்பட்டது.
ஒட்டுமொத்த பாரதத்திலும் சுமார் 70 பாராளுமன்ற தொகுதிகளில் வெற்றியை தீர்மானிக்கும் நிலையில் முஸ்லிம்கள் ஜனத்தொகை இருப்பதாக ஒரு செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. இதனை புரிந்து கொண்டால் வருங்காலத்தில் இதன் ஆபத்து நம் கண்முன் விரிவாக தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
இன்றைய சூழ்நிலையில் பாரத நாட்டின் மேற்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்துக்கள் மக்கள் தொகை இரண்டாம் இடத்தில் உள்ளது.
அதேபோல் நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களில் 200 மாவட்டங்களில் இந்துக்களின் ஜனத்தொகை இரண்டாம் இடத்தில் உள்ளது.
அதுபோல உலக அளவிலும் இலங்கை, மியான்மார் (பர்மா), ஆப்கானிஸ்தான், சிங்கப்பூர், மலேசியா, பூடான் போன்ற அண்டை நாடுகளில் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்துக்கள் பெரும் எண்ணிக்கையில் வாழ்ந்தனர். குறிப்பாக பெரும்பான்மையாக வாழ்ந்தார்கள். ஆனால் அந்நாடுகளில் இன்று இந்துக்கள் சிறுபான்மையாகிவிட்டது மட்டும் அல்ல, அதளபாதாளத்தில் போய் கொண்டு இருப்பதை காண முடிகிறது.
இதற்கு காரணம் விழிப்புணர்வு இல்லாத சமூகமாக இந்துக்கள் வாழ்வதுதான் . மேலும், பெருகிவரும் மேற்கத்திய சிந்தனையான மைக்கிரோ ஃபேமிலி(குறுகிய குடும்பம்) மற்றும் லிவிங் டுகெதர் எனும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது, தனித்து வாழ்வது, உணவு பழக்கத்தால் ஏற்படும் மலட்டு தன்மை, குடும்பக்கட்டுப்பாடு போன்ற பல காரணங்களால் இந்துக்களின் மக்கள்தொகை வேகமாக குறைந்து வருகிறது. ஒவ்வொரு ஊரிலும் பெருகி வரும் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் இதனை நமக்கு புலப்படுத்துகின்றன.
இந்து முன்னணியின் நிறுவனர் வீரத்துறவி இராம. கோபாலன் அவர்கள் 1984ஆம் ஆண்டிலேயே இது குறித்து எச்சரிக்கை விடுத்தார். சினிமா நாடகம் போன்றவற்றில் அதிக குழந்தைகள் பெறுவதை அவமானமாக சித்தரித்த காலத்தில் ஒரு புரட்சியாக பத்து குழந்தைகளை பெற்ற தாயை பாராட்டி கௌரவித்து வீரத்தாய் பட்டம் அளித்தார். தேசத்திற்கும் சமூகத்திற்கும் ஜனத்தொகை என்பது இன்றியமையாதது என்பதை அன்றே விளக்கினார்.
குடும்பக்கட்டுப்பாடு நல்லது என்றால் அனைத்து மதத்தினரும் பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்து முன்னணி விடுக்கும் கோரிக்கை. இந்துக்களின் கருவையறுக்க மட்டும் குடும்பக்கட்டுப்பாட்டை பயன்படுத்தக்கூடாது.
மத சமநிலை அழிந்து சிறுபான்மை பெரும்பான்மையானால் மதவாதம் தலை தூக்கும் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
சுவாமி விவேகானந்தர் கூறுகிறார் உன்னில் ஒருவன் மதமாறி போகிறான் என்றால் உங்களின் எண்ணிக்கை ஒன்று குறைந்தது என்பதுடன் எதிரியில் ஒருவன் கூடிவிட்டான் என்பதை உணர்ந்து கொள் என்று எச்சரிக்கிறார்.
எனவே இந்திய பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவின் ஆய்வு இந்துக்களின் கண்களை திறக்க வேண்டும். இந்துக்களின் ஜனத்தொகை குறைந்தால் தேசத்தில் மத சகிப்புத் தன்மை, பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, பொருளாதாரம், நமது பாரம்பரிய பெருமைகளான மொழி, இலக்கியம், ஆலயங்கள் என எல்லாம் கேள்வி குறியாகிவிடும்.
இதனை கருத்தில் கொண்டு, ஆன்மீக பெரியோர்கள், சமுதாய தலைவர்கள், குடும்பங்களில் உள்ள மூத்த தலைமுறையினர் ஆகியோர் இளைய தலைமுறைக்கு ஜனத்தொகை பெருக வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்கூற வேண்டியது கடமையாகும்.
வருங்கால சமூகமும் இந்து மக்களின் தொகை குறைந்தால் ஏற்படும் அபாயத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்.
இந்து முன்னணி வீரத்துறவி இராம கோபாலன் அவர்கள் வழிநடத்திய வெற்றிப் பாதையில் இந்துக்களிடம் வேகமாக குறைந்து வரும் ஜனத்தொகை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை தொடர்ந்து செய்யும். இந்துக்கள் தேச நலன் மற்றும் இந்து சமூக நலன் கருதி அதற்கு தங்களின் முழு ஒத்துழைப்பை நல்க அறைகூவல் விடுக்கிறோம்.
இன்று தர்மசாலாவில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது.
பெங்களூரு அணியை (241/7, விராட் கோலி 92, ரஜத் படிதர் 55, காமரூன் கிரீன் 46, தினேஷ் கார்த்திக் 18, ஹர்ஷல் படேல் 3/38, வித்வத் கவேரப்பா 2//36) பஞ்சாப் அணி (181, ரிலீ ரோஸ்கோ 61, ஷஷாங்க் சிங் 37, ஜானி பெயிர்ஸ்டோ 27, சாம் கரண் 22, முகம்மது சிராஜ் 3/43, ஸ்வப்னில் சிங் 2/28, லாக்கி ஃபெர்கூசன் 2/29, கரன் ஷர்மா 2/36) 60 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இன்றைய ஆட்டத்தில் பூவாதலையா வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதனால் பெங்களூரு அணி முதலில் மட்டையாட வந்தது. தொடக்க வீரர் டியு பிளேசிஸ் 2.2ஆவது ஓவரில் 9 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். மூன்றாவதாகக் களமிறங்கிய வில் ஜேக்ஸ் 4.4ஆவது ஓவரில் 12 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.
ஆனால் மற்றொரு தொடக்க வீரர் விராட் கோலி (47 பந்துகளில் 92 ரன், 7 ஃபோர், 6 சிக்சர்) 17.4ஆவது ஓவர் வரை விளையாடினார். அவரும் ரஜத் படிதரும் (23 பந்துகளில் 55 ரன், 3 ஃபோர், 6 சிக்சர்) இணைந்து அதிரடியாக விளையாடினார்கள்.
பத்து ஓவர் முடிவில் பெங்களூரு அணி மூன்று விக்கட் இழப்பிற்கு 119 ரன் எடுத்திருந்தது. அப்போது மழை குறுக்கிட்டது. அரை மணி நேரத்திற்கு மழையும் ஆலங்கட்டி மழையும் பெய்தது.
மழைக்குப் பின்னர் பெங்களூரு அணியின் காமரூன் கிரீன் (27 பந்துகளில் 46 ரன்), தினேஷ் கார்த்திக் (7 பந்துகளில் 18 ரன், 1 ஃபோர், 2 சிக்சர்) சிறப்பாக ஆடினர். இதனால் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கட்டுகள் இழப்பிற்கு 241 ரன் எடுத்தது.
பெங்களூரு அணியின் பேட்டர்கள் 19 ஃபோர் மற்றும் 16 சிக்சர்கள் அடித்தனர். கர்நாடகாவைச் சேர்ந்த வித்வத் காவேரப்பா இன்று பஞ்சாப் அணியில் விளையாடி தொடக்கத்திலேயே டியு பிளேசிஸ் மற்றும் வில் ஜேக்ஸ் விக்கட்டுகளை எடுத்தார். கடைசி ஓவரில் ஹர்ஷல் படேல் மூன்று விக்கட்டுகளை எடுத்தார். மற்றபடி பெங்களூரு அணியின் பேட்டர்கள் பஞ்சாபின் பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கினார்கள்.
242 ரன் என்ற கடின இலக்கை அடைய இரண்டாவதாக ஆடிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் பிரப்சிம்ரன் சிங் (4 பந்துகளில் 6 ரன்) மற்றும் ஜானி பெயிர்ஸ்டோ (16 பந்துகளில் 27 ரன், 4 ஃபோர், 1 சிக்சர்) இருவரும் சுமாரான தொடக்கம் தந்தனர்.
மூன்றாவதாகக் களமிறங்கிய ரிலீ ரோஸ்கோ (27 பந்துகளில் 61 ரன், 9 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் ஷஷாங்க் சிங் (19 பந்துகளில் 37 ரன், 4 ஃபோர், 2 சிக்சர்) இருவரும் ரன் ரேட் குறையாமல் பார்த்துக்கொண்டனர்.
ஆனால் ஜிதேஷ் ஷர்மா (5 ரன்) மற்றும் லியம் லிவிங்க்ஸ்டோன் (பூஜ்யம் ரன்) இருவரும் இன்று ஜொலிக்கவில்லை. சாம் கரண் (16 பந்துகளில் 22 ரன், 2 ஃபோர்), அஷுத்தோஷ் ஷர்மா (8 ரன்), ஹர்ஷல் படேல் (பூஜ்யம் ரன்), ராஹுல் சாஹர் (ஆட்டமிழக்காமல் 5 ரன்), அர்ஷதீப் சிங் (4 ரன்) ஆகியோரால் இலக்கை எட்ட முடியவில்லை.
இதனால் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 181 ரன்னுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 60 ரன் வித்தியாசத்தில் தோல்வியத் தழுவியது.
பெங்களூரு அணியின் விராட் கோலி தனதுசிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருதுபெற்றார்.
நாளை அகமதாபாத்தில் குஜராத் டைடன்ஸ் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.
இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது, இது நாட்டில் பன்முகத்தன்மையை வளர்ப்பதற்கு உகந்த சூழல் இருப்பதாகக் கூறுகிறது என்று பிரதமருக்கான ஆலோசனைக் குழு (EAC-PM) பொருளாதாரத்தின் சமீபத்திய ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 1950க்கும், 2015க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்து மக்கள்தொகையில் 7.8% சரிந்துள்ளதாகவும், முஸ்லிம் மக்கள்தொகையில் 43.15% உயர்ந்துள்ளதாகவும் பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் அறிக்கை தெரிவித்துள்ளது.
மதச் சிறுபான்மையினரின் பங்கு – ஒரு குறுக்குவெட்டு பகுப்பாய்வு (1950-2015) என்ற தலைப்பில் பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஷாமிகா ரவி தலைமையிலான இக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் 1950 மற்றும் 2015க்கு இடைப்பட்ட காலத்தில் இந்துக்களின் மக்கள்தொகை 7.82% குறைந்துள்ளது. அதே சமயம் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 43.15% அதிகரித்துள்ளது.
சரியும் ஹிந்துக்களின் எண்ணிக்கை
இந்திய மக்கள்தொகையில், 1950ல் 84.68 ஆக இருந்து இந்துக்களின் சதவீதம், 2015ல் 78.06 ஆக குறைந்துள்ளது.
கணிசமாக உயரும் இஸ்லாமியர்கள் எண்ணிக்கை
1950ல் 9.84 ஆக இருந்த இஸ்லாமியர்களின் சதவீதம், 2015ல் 14.09 ஆக உயர்ந்துள்ளது.
இதேபோல், 1950ல் 2.24 ஆக இருந்த கிறிஸ்தவர்களின் சதவீதம், 2015ல் 2.36 ஆக உயர்ந்துள்ளது. இது 5.38% உயர்வாகும்.
1950ல் 1.24% இருந்த சீக்கியர்கள், 2015ல் 1.85% ஆக உயர்ந்திருக்கிறார்கள். இது 6.58% உயர்வு ஆகும்.
சரிவு காணும் சமணர், பார்ஸிகளின் எண்ணிக்கை
சமணர்கள் மற்றும் பார்சிக்களின் சதவீதம் குறைந்துள்ளது. 1950ல் 0.45% ஆக இருந்த சமணர்களின் எண்ணிக்கை, 2015ல் 0.36% ஆக குறைந்துள்ளது. 1950ல் 0.03% ஆக இருந்த பார்சிக்கள், 2015ல் 0.004% ஆக இருக்கிறார்கள். இது 85% சரிவு.
சர்வதேச அளவில், பெரும்பான்மை மக்களின் விகிதம் குறைந்து வரும் போக்கு நிலவுவதாகவும், அதை ஒட்டி இந்தியாவிலும் பெரும்பான்மை மக்களின் விகிதம் 7.82% குறைந்துள்ளது என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.
இது சமூகத்தில் பன்முகத்தன்மையை வளர்ப்பதற்கு உகந்த சூழல் உள்ளதைக் காட்டுகிறது. அதேநேரம், சாதகமற்ற பிரிவினருக்கு ஏற்ற சூழலையும், ஆதரவையும், கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் முடிய வழங்காத வரை அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படாது என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.
அரசு சார்பில் எடுக்கப்பட்டுள்ள அனைத்து வகையான கொள்கை நடவடிக்கைகள், அரசியல் முடிவுகள், சமூக செயல்பாடு ஆகிய அனைத்தும் சமூகத்தில் பன்முகத்தன்மையை அதிகரிப்பதற்கு ஏற்ப இருக்கிறது என்பதையே, பெரும்பான்மை மக்கள்தொகை குறைவு மற்றும் சிறுபான்மை மக்கள் தொகை அதிகரிப்பு காட்டுகிறது.
அண்டை நாடுகளைச் சேர்ந்த மக்கள் நெருக்கடி காரணமாக இந்தியாவுக்கு வருவதில் ஆச்சரியமில்லை. பெரும்பான்மை மக்கள் தொகை குறைவதும், சிறுபான்மை மக்கள் தொகை உயர்வதும் உலகலாவிய போக்காக உள்ள போதிலும், பங்களாதேஷ், பாகிஸ்தான், இலங்கை, பூட்டான் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் அது பிரதிபலிக்கவில்லை.
இந்த நாடுகளில், பெரும்பான்மை மதப் பிரிவினரின் எண்ணிக்கை அதிகரித்து, சிறுபான்மை மக்களின் எண்ணிக்கை ஆபத்தான முறையில் சுருங்கியுள்ளது.
முஸ்லிம் பெரும்பான்மை இல்லாத இந்தியா, மியான்மர், நேபாள் ஆகிய நாடுகளில் பெரும்பான்மை மதத்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு முக்கிய காரணங்களுக்காக 1950 ஆம் ஆண்டு ஒரு அடிப்படை ஆண்டாக முக்கியமானது என்று அறிக்கை குறிப்பிட்டது.
புதிதாக உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் சர்வதேச மனித உரிமைகள் கட்டமைப்பானது சிறுபான்மை உரிமைகள் மற்றும் சிறுபான்மையினரைப் பாதுகாப்பதற்கான அரசின் பொறுப்புடன் சர்வதேச சட்டத்தில் முக்கிய நீரோட்டத்துடன் வடிவம் பெறத் தொடங்கிய நேரத்தில் இதுவாகும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
1950 மற்றும் 2015 க்கு இடையில் 65 ஆண்டுகளில் ஒரு நாட்டின் மக்கள்தொகையில் மாறிவரும் பங்கின் அடிப்படையில் உலகெங்கிலும் உள்ள சிறுபான்மையினரின் நிலை குறித்த விரிவான குறுக்கு-நாடு விளக்க பகுப்பாய்வு ஆகும்.
பகுப்பாய்வு செய்யப்பட்ட 167 நாடுகளுக்கு, 1950 ஆம் ஆண்டின் அடிப்படை ஆண்டில் பெரும்பான்மை மதப் பிரிவின் பங்கின் சராசரி மதிப்பு 75 சதவிகிதம் ஆகும், அதே சமயம் 1950 மற்றும் 2015 க்கு இடையில் பெரும்பான்மை மதப் பிரிவின் மாற்றத்தைக் கைப்பற்றும் விநியோகத்தின் சராசரி மதிப்பு 21.9 ஆகும்.
என் தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன்பாக அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!
தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்
கேள்வி – நாங்கள் மோதி பக்தர்கள் என்று முத்திரை குத்தப்பட்டவர்கள். தடைவிதிக்கப்பட்ட 14 ஊடகவியலாளர்களில் நாங்கள் இருவரும் உண்டு.
பதில் –14 பேர் பட்டியலுக்கு ஒரு அர்த்தம் உண்டு. 2014ஓடு தொடர்புடையது 14. சிரிப்பு. ஆகையால் 2024இலே மேலும் 10 இணையும். சிரிப்பு.
கேள்வி– எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது பிரதமர் அவர்களே. உங்களை எதேச்சாதிகாரி என்பவர்களும் கூட சுதந்திரமாகத் திரிகிறார்கள் எனும் போது நீங்கள் என்ன மாதிரியான எதேச்சாதிகாரி? சிரிப்பு. இறந்து போ மோதி என்பவர்களும் கூட சுதந்திரமாகவே திரிகிறார்கள். என்ன மாதிரியான எதேச்சாதிகாரம் இது?
பதில்– நீங்கள் எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என் தாயைக் கூட இவர்கள் விட்டு வைக்கவில்லை என் குடும்பத்தைத் திட்டித் தீர்த்து விட்டார்கள் மிக மோசமான சொற்களைப் பயன்படுத்தினார்கள், ஆனால், அவர்கள் ஏற்படுத்திய எதேச்சாதிகாரி பிம்பத்தில் எல்லா கெட்ட வார்த்தைகளும் போய் அடங்கி விடும். என்ன செய்தாலும் நீங்கள் எதேச்சாதிகாரியே.
தாயில்லாக் குறையைத் தீர்த்து வைத்த நாட்டின்கோடானுகோடி தாய்மார்கள்
நான் வேட்புமனு தாக்கல் செய்யச் சென்றபோது… முதன்முறையாக, தாயின், ஆசிகளைப் பெற்றுச் செல்வோம் என்று சென்றேன்.
நான்.. என் சகோதரன் வீடு சென்றேன். அம்மா எனக்கு வெல்லம் கொடுத்தாள். அப்போதிலிருந்து எத்தனை முறை வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறேனோ, அனைத்திற்கு முன்பாகவும் தாயின் பாதம் பணியச் சென்றிருக்கிறேன். வேட்புமனு தாக்க, செய்திருக்கிறேன்.
அவர்களும் வெல்லம் அளிப்பார்கள். என் வாழ்க்கயின் முதல் தேர்தல் இது, இப்போது நான், தாயின் தாள் பணியாமல் செல்கிறேன். ஆனால், மனதில் ஒரு உணர்வும் ஏற்படுகிறது. இன்று 140 கோடி மக்களின் கோடானுகோடி தாய்கள் இருக்கின்றார்கள்.
அவர்கள், என் மீது நிறைய அன்பைப் பொழிந்திருக்கிறார்கள், ஆசிகள் அளித்திருக்கிறார்கள், அவர்களை நினைத்துக் கொண்டு, அதன் பிறகு, அன்னை கங்கை இருக்கவே இருக்கிறாள், அன்னை கங்கை இருக்கிறாள்.
குறை என்னவோ இருக்கிறது!!! அதே சமயம் கோடிக்கணக்கான தாய்களையும் பார்க்கிறேன். ஒருவேளை, உணர்வுரீதியாக, எனக்கு எப்போதுமே, சக்தியை அளித்து வருகிறாள்.
2014 வரை எல்லை தாண்டி இந்தியா வந்து இந்தியர்களையும் பாதுகாப்புப் படையினரையும் போட்டுத் தள்ளுவது பாக். அமைதி மார்க்கத்தவருக்கு பொழுது போக்கு. அவர்களுக்கான யுபிஏ அரசு அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இருந்தது அப்போது.
யுபிஏ-2வின் 2011இல் குப்வாரா பகுதிக்குள் நுழைந்த பாக் இராணுவத்தினர், இந்திய இராணுவத்தினரைத் தாக்கியதோடு ஆறு இராணுவத்தினரை முடித்தனர். தங்கள் வெற்றியின் ‘சின்னமாக’ இரு இராணுவ வீரர்களின் தலைகளை வெட்டி பாக் எடுத்துச் சென்றனர்.
எனவே… இராணுவத்துக்கு இருக்கும் ‘சிறு’ அதிகாரத்தை உபயோகிக்க முடிவெடுத்தது குப்வாரா டிவிஷனில் இருந்த இராணுவம்.
உடனே பதிலடி கொடுப்பார்கள் என்று காத்திருந்தது பாக். அதை உணர்ந்த டிவிஷன், காலதாமதம் செய்தது. மூன்று பாக் கிராமங்களை தேர்ந்தெடுத்தது டிவிஷன். நிதானமாக செப்டம்பர் 2011இல் அங்கு பல குழுக்களாகப் பிரிந்து, நுழைந்தது. கிராமத்தை சுற்றியும் கன்னி வெடிகளை பதித்தனர் சில பிரிவினர். மற்ற பிரிவினர் கிராமங்களுக்குள் நுழைந்தனர்.
அவர்களைத் தாக்க வந்த பாக் இராணுவத்தினரை துவம்சம் செய்தனர் நம் வீரர்கள். ‘திட்டத்தோடு வந்திருக்கிறார்கள். ஓடி விடுவோம்’ என்று ஓடத் துவங்கிய பாக் இராணுவத்தினர் கன்னி வெடியில் சிக்கி 72 கன்னியரை நோக்கிப் பயணம்! மொத்தம் 11 பேர் ஜன்னத். அந்த 11 பேரில் நால்வரின் தலையை வெ*ட்*டி பாரதம் எடுத்து வந்தனர் நம்மவர்கள்.
தன் இராணுவத்தினர் தாக்கப் பட்டதற்கு உடனே பதிலடி கொடுக்க முடிவெடுத்து பாய்ந்தனர் குப்வாரா பகுதியில் பாக் இராணுவத்தினர். அவர்கள் வருகைக்காக தயாராக இருந்த நம்மவர்கள் பாக் ஆட்களை போட்டுத் தள்ளினர்.
ரொம்ப அசிங்கப் பட்ட பாக், விவகாரத்தை ஐ.நா எடுத்துச் சென்றது…. இதன் காரணமாக, அந்த ஆப்பரேஷனுக்கு காரணமான இந்திய இராணுவ அதிகாரிக்கு பதவி உயர்வை தடுத்தது யுபிஏ! கொண்டாடப்பட வேண்டியவரை தண்டித்தது கேடுகெட்ட காங்!
இந்த ஆப்பரேஷனுக்கு இஞ்சி (OP GINGER) என்று பெயரிட்டிருந்தனர் நம் இராணுவத்தினர்!
சிவகாசி, மே 9: சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டியில் தனியா பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 5பெண் தொழிலாளர்கள் உட்பட 9 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 13 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.
சிவகாசி அருகே உள்ளது செங்மகலப்பட்டி கிராமம். இங்கு, திருத்தங்கலை சேர்ந்த சரவணன் என்பவருக்கு சொந்தமான சுதர்சன் பட்டாசு ஆலை உள்ளது. நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் உரிமம் பெற்ற இந்த ஆலையில் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது.
இத்நிலையில், வியாழன்று காலை வழக்கம் போல் பணிக்கு வந்த தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வேதிப் பொருட்களில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட உராய்வு மற்றும் வெயிலின் சீற்றம் காரணமாக திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆலையில் இருந்த 8 அறைகள் உடைந்து நொறுங்கியது.
தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் பொது மக்களின் உதவியுடன் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
வெடி விபத்து நடைபெற்ற அறையிலிருந்து தீயானது , அருகில் உள்ள பல்வேறு அறைகளுக்கும் கண் இமைக்கும் நேரத்தில் பரவியது. இதனால், தொடர்ந்து பட்டாசுகள் வெடித்துச் சிதறிக் கொண்டே இருந்தன. இதன் காரணமாக யாரும் விபத்து நடைபெற்ற இடத்திற்கு நீண்ட நேரமாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டது . இதனால், மீட்பு பணியிலும் சில மணி நேரம் தொய்வு ஏற்பட்டது
9 பேர் உயிரிழப்பு
பட்டாசு வெடிப்பது நின்றவுடன், தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறையினர் கட்டிடங்களின் இடிபாடுகளுக்குள் சிக்கியும் உடல் சிதறியும் கிடந்த 5 பெண் தொழிலாளர்கள் உட்பட 9 தொழிலாளர்களின் உடலை மீட்டனர்.
இறந்தவர்களின் விவரம்:
சிவகாசி ரிசர்வ் லைன் பகுதியைச்சேர்ந்த மச்சக்காளை என்பவர் மனைவி முத்து(57), அதே பகுதியைச் சேர்ந்த மாயாண்டி மனைவி ஆவுடையம்மாள் (80), கல்போது கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் (29), மத்தியசேனை பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் ரமேஷ்(31), சொக்கலிங்காபுரத்தைச் சேர்ந்த குருசாமி மகன் காளீஸ்வரன் (47) ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் 4 பேரின் முகம் மற்றும் உடல்கள்சிதறி உள்ளதால் அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
13 பேர் காயம் :
மேலும் இந்த விபத்தில் காயம் அடைந்த 13 தொழிலாளர்கள் உடனடியாக மீட்கப்படு, சிவகாசியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டனர். பின்பு, அங்குள்ள நவீன தீக்காய சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப் பட்டனர். அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர்.
காயமடைந்தோர் விவரம்:
சிவகாசி, ரிசர்வ் லைன் நேருஜி நகரைச் சேர்ந்த மாரீஸ்வரன் மனைவி மல்லிகா(35), அதே பகுதியைச் சேர்ந்த சித்விநாயகர் மனைவி மாரியம்மாள்(50), அய்யமபட்டியைச் சேர்ந்த இராமமூர்த்தி மனைவி நாகஜோதி(35), மத்திய சேனையைச் சேர்ந்த செல்வம் மனைவி இந்திரா (48), அதே பகுதியைச் சேர்ந்த முருகன் மனைவி ரெக்கம்மாள் (40), ஆலமரத்துப்பட்டியைச் சேர்ந்த லட்சுமணன் மனைவி சுப்பலட்சுமி (62), ரிசர்வ் லைன் காந்தி நகரைச் சேர்ந்த மூக்கன் மகன் திருப்பதி(47), அதே பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் கண்ணன் (30), திருத்தங்கல்லைச் சேர்ந்த ஜெயராஜ் (42), மத்தியசேனையைச் சேர்ந்த பெருமாள் மகன் அழகுராஜா(30), அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மனைவி அம்சவள்ளி(32), நாச்சான் மனைவி வீரலட்சுமி(35), அய்யம்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் மனைவி செல்வி (39) ஆகியோர் படுகாயமடைந்தனர்.
ஆய்வு :
இந்நிலையில், வெடி விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையை மதுரை சரக டிஐஜி ரம்யாபாரதி நேரில் ஆய்வு செய்தார்.
இந்த விபத்து குறித்து சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிஐடியு ஆறுதல் : விபத்தில் பாதிக்கப்பட்ட உயிரிழந்த மற்றும் காயமடைந்த தொழிலாளர்களுக்கு சிஐடியு மாவட்ட செயலாளர் பி.என்.தேவா, பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் எம்.சி.பாண்டியன், சிஐடியு நிர்வாகிகள் கே.முருகன், பி.பாலசுப்பிரமணியன், எம்.முத்துச்சாமி, அம்பேத்குமரேசன், மாரிச்சாமி ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கிடுக : சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு அரசு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.
மேலும், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் விதிமுறைகளை முறையாக பின்பற்றாத காரணத்தாலும், உற்பத்தியாளர்களின் லாப வெறியின் காரணமாகவும், ஆலைகளை சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகள் உரிய முறையில் ஆய்வு செய்யாததாலும் தொடர் விபத்துக்கள் நடைபெறுகிறது. எனவே, தமிழக அரசு, விதிமுறைகளை பின்பற்றாத பட்டாசு ஆலைகள் மற்றும் அதன் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.அர்ஜூனன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மாநில அரசு பதில் தர வேண்டும்: பாஜக.,
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் 5 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. தொடரும் இந்த பட்டாசு தொழிற்சாலை மரணங்களுக்கு காரணம், மாநில அரசின் அலட்சியமே.
உரிமம் இல்லாமல் நடைபெறும் உற்பத்தி, விதிகளை பின்பற்றாமல் அல்லது பாதுகாப்பு விதிகளை மீறி நடைபெறும் தொழிற்சாலைகள் இயங்குவது அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்படும் லஞ்சம், ஊழலினால் தான்.
ஒவ்வொரு முறையும் இது போன்ற மரணங்கள் நிகழும் போது சில லட்சங்களை இழப்பீடாக வழங்கி விட்டு அடுத்த மரணங்களை எதிர் நோக்கி காத்திருப்பது வெட்கக்கேடு. உடனடியாக இதற்கு தீர்வு காணப்பட வேண்டும். சிவகாசியில் உள்ள பெரிய பட்டாசு நிறுவனங்களை ஆலோசித்து தீர்வு காண முனைய வேண்டும் தமிழக அரசு.
மேலும், இந்த மரணங்களுக்கு காரணமானவர்களுக்கு கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழக அரசுக்கு உள்ளது… என்று, பாஜக, மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.
இன்று ஹைத்ராபாத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது.
லக்னோ அணியை (165/4, ஆயுஷ் பதோனி 55*, நிக்கோலஸ் பூரன் 48*, கே.எல். ராகுல் 29, க்ருணால் பாண்ட்யா 24, புவனேஷ் குமார் 2/12) ஹத்ராபாத் அணி (9.4 ஓவரில் 167/0, ட்ராவிஸ் ஹெட் 89*, அபிஷேக் ஷர்மா 75*) 10 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
இன்றைய ஆட்டத்தில் பூவாதலையா வென்ற லக்னோ அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் க்விண்டன் டி காக் (2 ரன்) மூன்றாவது ஓவர் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் மூன்றாவதாகக் களமிறங்கிய மார்கஸ் ஸ்டோயினிஸ் (3 ரன்) அவிட்டானார்.
அதன் பின்னர் க்ருணால் பாண்ட்யா (21 பந்துகளில் 24 ரன்) ஆட வந்தார். அவர் கே. எல். ராகுல் (33 பந்துகளில் 29 ரன்), இணைந்து மிக நிதானமாக ஆடினார். க்ருணால் 11.2ஆவது ஓவரிலும், ராகுல் 9.6ஆவது ஓவரிலும் ஆட்டமிழந்தனர். அவர்களுக்குப் பதிலாக ஆடவந்த நிக்கோலஸ் பூரன் (26 பந்துகளில் 48 ரன்), ஆயுஷ் பதோனி (30 பந்துகளில் 55 ரன்) அணியின் ஸ்கோரை 20 ஓவர்களில் 165 ஆக உயர்த்தினர்.
19ஆவது ஓவரில் 15 ரன்னும், 20ஆவது ஓவரில் 19 ரன்னும் அடிக்கப்பட்டது. இதனால் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கட்டுகள் இழப்பிற்கு 165 ரன் எடுத்தது.
166 ரன் என்ற எளிய இலக்கை அடைய இரண்டாவதாக ஆடிய ஹதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் அபிஷேக் போரல் (28 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 75 ரன், 8 ஃபோர், 6 சிக்சர்) மற்றும் ட்ராவிஸ் ஹெட் (30 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 89 ரன், 8 ஃபோர், 8 சிக்சர்) இருவரும் 9.4 ஓவர்களில் 167 ரன் அடித்து மிக மிக எளிதாக அணிக்கு வெற்றியைப் பெற்றுத்தந்தனர்.
லக்னோ அணிக்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது எனப் புரிவதற்கு முன் ஆட்டம் முடிந்துவிட்டது. ட்ராவிஸ் ஹெட் 16 பந்துகளிலும் அபிஷேக் ஷர்மா 18 பந்துகளிலும் 50 ரன் அடித்தனர்.
சன்ரைசர்ஸ் அணி பவர்பிளே ஓவர்களுக்குள் 100 ரன் அடித்துவிட்டது. தொடக்கத்தில் பந்துவீசும்போது அவர்களது பந்துவீச்சாளர் புவனேஷ் குமார் நாலு ஓவர் வீசி 12 ரன் கொடுத்து 2 விக்கட் வீழ்த்தியதே அணிக்கு ஒரு பெரிய பூஸ்ட் என்றால், பின்னர் ஹெட் மற்றும் அபிஷேக்கின் ஆட்டம் இந்தப் போட்டியின் ஏனைய போட்டிகளில் அவர்களை உயிர்ப்புடன் வைக்கும்.
அவர்கள் சந்தித்த 9.4 ஓவர்களில் ஒவ்வொரு இரண்டாவது பந்தும் சிக்சாகவோ ஃபோராகவோ இருந்தது. ஆனால் சோகம் என்னவென்றால் ட்ராவிஸ் ஹெட் ஆஸ்திரேலிய அணியில் வருகின்ற டி20 உலகக் கோப்பை அணியில் சேர்க்கப்படவில்லை.
ஹைதராபாத் அணியின் ட்ராவிஸ் ஹெட் தனதுசிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார்.
நாளை தர்மசாலாவில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.
பெருந்துறையை அடுத்துள்ள ஸ்லேட்டர் நகர் பகுதியில் எதிரே வந்த பைக் மோதிய விபத்தில் ஸ்கூட்டரில் சென்ற நபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெருந்துறையை அடுத்துள்ள கணக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சென்னிமலை கவுண்டர் மகன் கந்தசாமி (65). விவசாயியான இவர், நேற்று மாலை தனது சொந்த வேலையாக துடுப்பதிக்கு தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது இவருக்கு எதிரே வந்த ஒரு பைக் எதிர்பாராத விதமாக இந்த ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் ஸ்கூட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்ட கந்தசாமி, உயிருக்கு ஆபத்தான நிலையில் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து வந்த அவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மருதமரத்தை தலவிருட்சமாக கொண்ட மூன்று மகா முக்கிய சிவதலங்களில் இரண்டாவது தலம் இந்த திருவிடை மருதூர்
காவேரி ஆற்றின் கரையில் மயிலாடுதுறைக்கும் இடையில் இருக்கும் அந்த ஆலயம் மகா சிறப்பானது, அதனாலே அங்கிருக்கும் லிங்கம் மகாலிங்கம் என வணங்கபடுகின்றது, காவேரி கரையின் மகா தொன்மையானதும் மாபெரும் சக்தி கொண்டதுமான அவ்வாலயம் காலத்தால் யுகங்களால் பழமையானது
அதன் மூலம் பிரம்ம தேவன் ஊழிகாலத்தில் செய்த காரியத்தில் இருந்து தொடங்குகின்றது, யுகமுடிவின் ஊழிகாலத்தில் பிரம்மன் அமுதத்தை ஒரு கலயத்தில் வைத்து மூடி மிதக்கவிட , பின் வெள்ளம் வடியும் போது அந்த அமுதம் சிந்திய இடங்களில் இதுவும் ஒன்று
அதாவது அந்த புராண கதையின் மூலம் அமுதம் உண்ட பலனை அதாவது நல்ல புண்ணிய பலனை தந்து தேவர்கள் போல் வாழும் வரம் அருளும் ஆலயம் என பொருள்
இதன் வரலாறும் பெருமையும் நீண்டது , ஒரு தனி புத்தகமாக வரகூடியது என்றாலும் முடிந்தவரை சுருக்கமாக காணலாம்
காவேரிகரையில் காசிக்கு சமமான புண்ணியங்களை தரும் ஆலயங்கள் ஆறு உண்டு, திருவையாறு, திருசாய்க்காடு (சாயாவனம்), திருவெண்காடு, திருவாஞ்சியம் மற்றும் மயிலாடுதுறை என உண்டு இதில் முக்கியமானது இந்த திருவிடை மருதூர் மகாலிங்க சுவாமி ஆலயம்
இதன் பெருமையும் தொன்மையும் பழைய சுவடிகளில் நிரம்ப உண்டு
சிவரகஸ்யம், ஸ்காந்தம், இலிங்கப்புராணம், பிரமகைவர்த்தம் முதலிய பிரபல கிரந்தங்கள் சிறப்பாக எடுத்துரைக்கின்றன.
மருதவனப் புராணம், திருவிடைமருதூர் உலா, திருவிடைமருதூர் கலம்பகம், திருவிடைமருதூர் பதிற்றுப் பத்தந்தாதி, திருவிடைமருதூர் நொண்டி நாடகம் முதலிய இலக்கியங்களும் இத்தலச் சிறப்பை விளக்குகின்றன , அந்த அளவு இது பழமையானதும் முக்கியமான ஆலயமுமாகும்
இந்த ஆலயத்தை ஸ்தாபித்த வரலாறு அகத்திய முனிவரில் இருந்து தொடங்குகின்றது, அகத்தியர் தென்னகம் வந்து காவேரியினை திருப்பி சோழநாட்டிற்கு அனுப்பி அதன் கரையெல்லாம் சிவாலயம் ஸ்தாபித்ததில் இருந்து தொடங்குகின்றது
அவர் பிரம்மன் அனுப்பிய அமிர்த துளிகள் அடையாளம் காட்டிய இடம், சக்திமிக்க இடம் இது என அறிந்து அங்கே அமர்ந்து ஈசனை வேண்டினார், இங்குவரும் மக்களெல்லாம் தங்கள் கர்மம் அழிய, தங்கள் பிணி அழிய, தேவ்ர்களை போல பெருவாழ்வு வாழும் வரம் பெற தவமிருந்தார்
அவரின் வேண்டுதலுக்கு ஏற்ப ஈசனே வந்து வரமருளினார், ஈசனே ஜோதிலிங்கமாக இங்கு அமர்ந்தார், அத்தோடு மட்டுமல்ல எப்படி வழிபாடுகளை செய்யவேண்டும் என சிவனே வழிபட்டு சொல்லி கொடுத்தார்
சிவனே சிவபூஜை செய்த தலம் இது, அதாவது சிவனே “காமிகா ஆகமம்” எனும் மகா முக்கிய ஆகமத்து விதிகளை இங்கே போதித்து அதை தானே செய்துகாட்டி போதனையே நடத்தினார்
ஆகமங்கள் மொத்தம் 28, அதில் முக்கியமானது இந்த காமிகா ஆகமம், சைவ ஆகமங்களில் தலையாயது
ஆகமங்கள் என்றால் எப்படி ஆலயம் அமைய வேண்டும், என்னென்ன அம்சம் கொண்டிருக்க வேண்டும், எப்படியான அளவுகளில் எல்லாம் அமைய வேண்டும் சிற்பம் கருவறை விதி என்ன? பூஜை விதி என்ன? காலம் என்ன? என எல்லாமும் சொல்லி விளக்கும் போதனை தொகுப்பு
இது வித்யா பாதம் அல்லது ஞான பாதம், கிரியா பாதம். யோக பாதம், சரியா பாதம் என நான்கு பிரிவுகளை கொண்டிருக்கும், காமிகா ஆகமம் சிவவழிபாட்டை முழுமையாக போதிக்கின்றது
“காமிகம்” எனும் சொல்லுக்கு விரும்பியதை அடைவது என பொருள், அதாவது தான் விரும்பிய ஒன்றை பெற்று தவிப்பில் இருந்து விடுதலை அடைவது என பொருள்
ஆத்ம விடுதலையினை குறிக்கும் தத்துவம் இது, ஆம் இந்த காமிகா ஆகமம் முழுக்க முறையான வழிபாட்டால் ஆத்ம விடுதலை அடைவது எப்படி என்பதை சொல்கின்றது அதன் தாத்பரியம் இதுதான்
இப்படியான பெரும் அற்புதம் நடந்த ஆலயம் இது, இங்கிருந்துதான் இதன் வரலாறு தொடங்குகின்றது, அப்படி அகத்தியர் அழைத்து வந்த சிவபெருமானால் ஸ்தாபிக்கபட்டு மக்களுக்காக மக்களின் ஆன்ம ஈடேற்றத்துக்காக கொடுக்கபட்டது
மருதமரங்கள் இடையில் லிங்கம் வந்ததாலும், இரு அர்ஜூனங்களுக்கு இடையில் அமைந்த அர்ஜுனம் என்பதாலும் அது இடைமருதூர் என்றாயிற்று, பின் திருஇடை மருதூர் என அழைக்கபட்டு பின் திருவிடை மருதூர் என்றாயிற்று
சண்பகாரணியம், சத்திபுரம், தபோவனம், ஜோதிநகர், சர்வதீர்த்தபுரம், வில்வாரணியம், தருமவிருத்திபுரம், முத்திபுரம், பூலோக சிவலோகம், வீரசோழநகரம் ஆகிய பெயர்களையும் இது பெற்றது
மூவேந்தர்களும் ஏகபட்ட சிற்றரசர்களும் கட்டிவளர்த்த இந்த ஆலயம் தேவாரம் பாடிய மூவராலும் மாணிக்க வாசகராலும் பாடபட்டது
“இடைமருதில் மங்குல்தோய் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே” என பாடுகின்றார் சம்பந்தர்
“இடைமருதுமேவிய ஊசனாரே” என்பார் அப்பர் சுவாமிகள்
“இடைமருதுறை எந்தை பிரானே” என பாடுகின்றார் சுந்தரர்
இம்மூவரும் ஏகபட்ட பாடல்களை இந்த வரியோடு பாடினார்கள், இங்கு வந்து பாடினார்கள் அவ்வகையில் இது தேவாரம் பாடபெற்ற ஸ்தலம்
“எந்தையெந்தாய் சுற்றம் மற்றுமெல்லாம் என்னுடைய பந்தம் அறுத்தென்னை ஆண்டுகொண்ட பாண்டிப்பிரான் அந்த இடைமருகில் ஆனந்தத் தேனிருந்த பொந்தைப் பரவி நாம் பூவல்லி கொய்யாமோ”
பட்டினத்து அடிகள் இங்கேதான் தன் பிரசித்தியான மும்மணிகோவையினை இயற்றி பாடினார்
அருணகிரி நாதர், கவி காளமேகமெல்லாம் வந்து பாடிய தலம் இது, கருவூர் சித்தரின் விருப்பமான தலம் இது
மார்க்கண்டேய முனிவருக்கு அவரின் விருப்பப்படி அர்த்தநாரீஸ்வரர் உருவத்தில் இத்தலத்து இறைவன் காட்சி கொடுத்து வரமருளினார்
பட்டினத்தாரின் சீடரான உஜ்ஜைனியின் மகாராஜா பதிருஹரியார், காசியில் பட்டினத்தாரோடு சன்னியாசம் ஏற்ற அந்த பத்ருஹரியார், பெரும் சிவனடியாராகி பெரும் தத்துவபாடல்களை கொட்டிய அந்த பத்ரஹரியார் சமாதி கொண்ட தலம் இதுதான்
இப்படி ஏகபட்ட பெருமைகளை கொண்ட ஆலயம் இது
சுவாமி மலை உள்பட மகா பிரசித்தியான தலங்கள் சுற்றி அமைய இந்த ஆலயம் மகாலிங்கம் என வீற்றிருக்கின்றது, திருவலஞ்சுழி, சுவாமிமலை, திருவாரூர், சிதம்பரம், ஆலங்குடி ,திருவாவடுதுறை – நந்திகேஸ்வரர், திருசேய்நலூர், சீர்காழி,சூரியனார்கோவில் என மகா முக்கிய கோவில்கள் இந்த ஊரை சுற்றி உண்டு
அப்படி பெரும் ஆலயங்கள் ஊருக்கு வெளியில் இருந்தாலும் இந்த ஆலயத்தை சுற்றி ஊருக்குள் இருக்கும் ஆலயங்களும் பிரசித்தியானவை
“திருவாரூர் தேர் அழகு திருவிடைமருதூர் வீதி அழகு” என்பார்கள், அந்த ஊரின் வீதிகள், இந்த மகாலிங்கம் இருக்கும் வீதிகள் அவ்வளவு அழகானவை புனிதமானவை
காரணம் அந்த தேரோடும் வீதிகளில் அமைந்திருகும் ஆலயங்கள் அப்படி
அந்த தேரோடும் நான்கு வீதிகளின் மூலைகளிலும் நான்கு விநாயகர் கோயில்கள் உள்ளன. தேரடியில் விநாயகர் கோயிலும், கீழவீதியில் விசுவநாதர் கோயிலும், மேல வீதியில் ரிஷிபுரீஸ்வரர் கோயிலும், தெற்கு வீதியில் ஆத்மநாதர் கோயிலும், வடக்கு வீதியில் சொக்கநாதர் கோயிலும் அழகுற ண்டு
இவற்றிற்கு மத்தியில் மகாலிங்கேஸ்வரர் வீற்றிருக்கின்றார். எனவே இத்தலத்தை “பஞ்ச லிங்கத்தலம்” என்றும் வணங்குவார்கள்
இந்த கோவிலின் வடக்குக் கோபுர வாயிலில் அகோர வீரபத்திரர் கோயிலும், மேற்குக் கோபுர வாயிலில் குமரன் கோயிலும் உள்ளன. கிழக்கு வாயிலில் படித்துறை விநாயகரும் பட்டினத்தாரும், மேல் வாயிலில் பர்த்ருஹரியாரும் தரிசனம் தருகின்றனர்.
அதாவது இங்கு சிவன் ஜோதி வடிவாகவும் இதனை சுற்றியுள்ள நான்கு திசைகளிலும் மற்ற நான்கு பூதங்களுக்குரிய கோயில்களும் அமைந்திருக்கின்றன.
இங்குள்ள சொக்கநாதர் கோயிலில் உள்ள மூர்த்திக்கு அபிஷேகம் செய்து மேகராகக் குறிஞ்சி பண்பாடினால் மழைபெய்யும் என்பது ஐதீகம், இந்த நம்பிக்கை எல்லா வறட்சி காலங்களிலும் பொய்த்ததில்லை, மிக கொடியவறட்சியில் இங்கு குறிஞ்சிபண்ணில் சரியாக பாடினால் மழை கொட்டும், அது வாடிக்கை
இந்த ஆலயத்தில் எங்குமில்லா சிறப்பாக ஆலய பிரகாரங்கள் அமைந்திருக்கின்றன
இக்கோவில் 3 பிரகாரங்களைக் கொண்டதாகும். இம்மூன்று பிரகாரங்களிலும் வலம் வருதல் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.
வெளிப் பிரகாரமாம் என்பது அஸ்வமேதப் பிரகாரம் என அழைக்கபடுகின்றத் இந்த்ப் பிரகாரத்தில் கோவிலை வலம் வருதல் அஸ்வமேத யாகம் செய்த பலனைக் கொடுக்கும்
இரண்டாம் பிரஹாரம் முடிப் பிரகாரம், மத்தியில் உள்ள பிரகாரமாகும். இப்பிரகாரத்தை வலம் வருதல் சிவபெருமான் குடியிருக்கும் கைலாச பர்வதத்தை வலம் வந்ததற்குச் சமம் என்று கூறப்படுகிறது.
மூன்றாம் பிரகாரம் ப்ரணவப் பிரகாரம், இப்பிரகாரத்தை வலம் வருவதால் மோட்சம் கிடைக்கும்
இந்த ஆலயம் கர்மம் தீர்க்கும் ஆலயம் , ஒருவனின் கர்மம் தீர்த்து அவனின் பாவகர்மத்தினை தீர்த்து புதுவாழ்வு அருளும் ஆலயம்
இந்த மூன்று அர்ஜூன தலங்களும் மும்மலங்களை, ஆணவம், கண்மம், மாயை எனும் மும்மலங்களை போக்கும் என்பது தாத்பரியம், அவ்வகையில் நெல்லை தாமிரபரணி கரையில் உள்ள புடார்ஜனம் எனும் கடையார்ஜூனம் மாயையினை போக்குவது
இந்த ஆலயம் கர்மத்தை அழிப்பது
அப்படி கர்மம் அழிந்து நன்மை பெற்றவர்கள் ஏராளம் உண்டு, இந்த ஆலயமே அதற்குத்தான் சிவனால் உருவாக்கபட்டு, கர்மம் அழிக்கும் காமிகா ஆகமபடி உருவாக்கபட்டு ஆன்ம விடுதலையினை கொடுக்கும்படி ஸ்தாபிக்கபட்டு கர்மத்தை அழித்து ஆன்ம விடுதலையினை முக்தியினை கொடுப்பது
உமாதேவியார், விநாயகர், சுப்பிரமணியர், கோடி உருத்திரர், விஷ்ணு, சந்திரன், பிரமாதி தேவர்கள், லட்சுமி, சரஸ்வதி, மூன்று கோடி முனிவர்கள் இங்குதான் தங்கள் கர்மம் தொலைத்தார்கள்
காசியிலிருந்து ஞானம் தேடி ஆத்ம விடுதலை தேடி அலைந்த பத்ரஹரியார் இங்குதான் ஞானமடைந்து முக்தியடைந்து சமாதி அடைந்து இன்றும் அரூபியாக நிற்கின்றார்
இந்த ஆலயம் ஞானம் வழங்கும் ஆலயம் கர்மம் அழிக்கும் ஆலயம் புதுபிறப்பு கொடுக்கும் ஆலயம்
அதனாலே மூகாம்பிகைக்கு கொல்லூரை அடுத்து இங்கு மட்டும்தான் தனி சன்னதி அமைந்துள்ளது
மூகாம்பிகை கர்மம் களைபவள், கர்மவிதியினை அழித்து புதிய விதி புதிய வாழ்க்கை தருபவள், அவள் கொல்லூரை அடுத்து குடிகொண்ட ஒரே ஒரு ஆலயம் இது என்பதிலே இதன் சிறப்பு விளங்கிவிடும்
இந்த ஆலயத்தின் மாபெரும் தாத்பரியத்தை , இது கர்மம் அழிக்கும் என்ற பெரும் உண்மையினை ஒரு பக்தனை கொண்டே உலகுக்கு ஒரு நாடகம் மூலம் சொன்னார் சிவன்
அந்த பக்தனின் பெயர் வரகுண பாண்டியன். ஆம், பாண்டியரில் புகழ்பெற்ற மன்னன்
நின்றசீர் நெடுமாறன் எனும் நாயான்மாரும் பாண்டிய மன்னனுமானவரின் கொள்ளு பேரன், எல்லா தமிழக மன்னர்களை போல் அவனும் அப்பழுக்கற்ற சிவபக்தன்
அந்த சிவபக்தனுக்கு ஒரு பெரும் சோதனை வந்தது, அவன் ஒருமுறை குதிரையில் செல்லும் போது கட்டுபாட்டை இழந்த குதிரை ஒரு அந்தணனை கீழே தள்ளி மிதிக்க அவன் இறந்துவிட்டான்
அவன் தவவலிமை மிக்க அந்தணன் அதனால் அவன் ஆவி உக்கிரமாக இருந்தது , பிரம்மகத்தி தோஷத்தில் சிக்கிய வரகுண பாண்டியனை அந்த தோஷமும் இந்த ஆவியும் பிடித்து ஆட்ட தொடங்க்கிற்று
மன்னனுக்கு மாந்ரீகம் பலனளிக்கவில்லை, யாகம் பலனளிக்கவில்லை, எந்த பரிகாரமும் பலனளிக்கவில்லை
பிரம்மகத்தி தோஷம் என்பது அப்படியானது, எல்லோரும் நினைப்பது போல் அது பிராமணனை கொன்றால் மட்டும் வருவது அல்ல, எவன் தவத்தில் சிறந்தவனோ எவன் பக்தியில் உயர்ந்தவனோ எவன் வேத ஞானத்தில் மகா உயர்ந்த அறிவில் இருப்பவனோ அவனை கொல்வது எல்லாமே பிரம்மகத்தி தோஷம்
ஒருவனுக்கு அறிவும் தவமும் வாய்ப்பது அரிது, அதை கொண்டு அவன் பல்லாயிரகணக்கான மக்களை வழிகாட்டமுடியும், ஞானம் கொடுக்கமுடியும்
அப்படிபட்ட ஒருவனை கொல்வதால் ஏராளமான மக்களை அறியாமையில் தள்ளும் பாவத்தை ஒருவன் செய்வதாலே அந்த தோஷம் தீர்க்கமுடியா பிரம்மஹத்தி என்றாயிற்று
வரகுண பாண்டியனும் அதில்சிக்கினான், உடல் தளர்ந்தது அவ்வப்ப்போது குழப்பம் வந்தது, முக்கியமாக அவனால் உறங்கமுடியவில்லை, பிரம்மஹத்தி தோஷமும் அந்தணன் ஆவியும் அவனை பாடாய் படுத்தின
பாண்டிய மன்னர்கள் சிவனடியார்கள், ஆலவாய் நாதன் முதல் ராமேஸ்வரம் நெல்லை தென்காசி குற்றாலம் என பெரும் பெரும் சிவாலயங்களை கட்டியவர்கள், அப்படிபட்ட பாண்டியர்களின் மன்னன் கடைசியில் சிவனிடமே அடைக்கலமானான்
சிவபெருமான் அவனுக்கு இறங்கிவந்து சொன்னார், “பாண்டியா இது கர்மவினை, உன் கர்மத்தை மாற்றும் சக்தி திருவிடைமருதூர் ஆலயத்துக்கே உண்டு, அங்கே சென்று உன் கர்மம் தீர்ப்பாய்”
பாண்டிய மன்னன் ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்தான், காரணம் பாண்டிய நாட்டில் இல்லா சிவாலயங்கள் இல்லை ஆனால் சிவனோ சோழநாட்டு சிவாலயத்துக்கு செல்ல சொல்கின்றார்
சோழநாடோ பகைநாடு, தன்னை நிச்சயம் சோழமன்னன் அனுமதிக்கபோவதில்லை என்பதால் மிக மிக குழம்பினான்
அப்போதுதான் செய்திவந்தது, சோழமன்னன் பாண்டிய நாட்டின் மேல் படையெடுத்துவரும் செய்தி அது
அதாவது பாண்டிய மன்னனுக்கு பிரம்மஹத்தி தோஷத்தால் ஆரோக்கியம் சிந்தை கெட்டது, மனமும் சிந்தையும் பாதிக்கபட்டது இப்போது போர் தொடுத்தால் வெற்றி என சோழமன்னன் திட்டமிட்டு வந்தான்
ஆனால் போரில் சோழமன்னன் தோற்றான் பாண்டியனே வெற்றிபெற்றான், அது சிவனருளால் நடந்தது
பின் வரகுண பாண்டியன் திருவிடை மருதூருக்கு சென்றான், அந்த அந்தணன் ஆவியும் தோஷமும் அவனோடே சென்றது
“பாண்டியா முன்வாசல் வழியாக வந்து காசிநோக்கி இருக்கும் வடக்கு வாசல் வழியாக செல்” என அவனுக்கு உத்தரவும் வந்தது
பாண்டிய மன்னன் ஆலயத்தில் நுழையும் போது அவனை பிடித்திருந்த ஆவியால் நுழையமுடியவில்லை அது வெளியில் நின்று மன்னன் வரட்டும் என காத்திருந்தது
மன்னனோ சிவனை வணங்கினான், உருகினான் பெரும் வழிபாடுகளை நடத்தினான், பலமணிநேரம் அவன் அங்கே அமர்ந்தபின் அவன் வடக்குவாசல் வழியாக வெளியேறி பாண்டிநாட்டுக்கு வந்தான்
கோவில் வாசலில் நின்றிருந்த ஆவிக்கு சிவன் நற்கதி அருளினார், அந்த தோஷமும் நீங்கிற்று
அவன் அங்கே கர்மம் நீங்கி புதுபிறப்பை அடைந்தான், பின் அவன் மாபெரும் சிவபணிகளை செய்து பெரும் புகழுடன் எதிரிகளே இல்லாத மன்னனாக வாழ்ந்து முடிந்தான்
பாண்டிய மன்னர்களில் அவனுக்கென பெரும் இடம் உண்டு, அப்படியான பெருநிலையினை இந்த திருவிடை மருதூர்தான் கொடுத்தது
ஆம், அக்கோவிலில் கிழக்குவாசல் வழியாக சென்று காசியினை நோக்கிய வடக்குவாசல் வழியாக வந்தால் கர்மம் கழியும் என்பது அந்த காட்சியில் சிவன் சொன்ன போதனை
அந்த வழமை இன்றுவரை உண்டு, இன்றுவரை பின்பற்றபடும் நடைமுறை அது
ஆம் , அந்த ஆலயம் ஒருவரின் கர்மபலன்களை கழிக்கும், அழிக்கும், அவர்களை புதுபிறப்பாக மாற்றி வாழவைக்கும்
இந்த இடையார்சுனம் எனும் திருவிடைமருதூர்தான் ஆண்மம், கர்மம், மாயை எனும் மும்மலத்தின் இடையில இருக்கும் கர்மத்தை அழிக்கும் சக்தி கொண்டது
இந்த ஆலயத்துக்கு சென்றுவழிபட்டால் கர்மம் கழியும், இங்கே , 27 நட்சத்திரங்கள் வழிபட்டு அருள் பெற்றதால் நட்சத்திரத் தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகிறது.
அதனால் 27 நட்சத்திரங்களுக்கும், 27 லிங்கங்கள் ஆடல்வல்லான் மண்டபத்தில் சாட்சியாக அமைந்துள்ளன
இது சந்திரனுக்குரிய தலம், சந்திரன் என்பது மன சம்பந்தபட்ட கிரகம், மனமே எல்லாவற்றுக்கும் காரணம் ஒருவன் கர்மமானது அவன் மன சிந்தனையால் அது கொடுக்கும் வழி நடப்பது
அந்த மனம் தெளிவாக இருத்தல் அவசியம்
வரகுண பாண்டியன் மனதினால் பாதிக்கபட்டான், அவன் சிந்தை பாதிக்கபட்டது ஒருவித இருள் அவன் மனதில் குடிகொண்டது
தீய ஆவி ஆதிக்கம், செய்வினை, பில்லி சூனியம் என்பதெல்லாம் இந்த மனதை முடக்குபவை, மனம் என்பது சந்திரனின் ஆதிக்கம்
இதனாலே மனபாதிப்பு கொண்டவர்கள் பௌர்ணமி அமாவாசைகளில் கொஞ்சம் அதிக உணர்வோடு இருப்பார்கள்
அப்படியான சந்திரன் அருள் வழங்கும் தலம் இது, அங்கே சிவனருளும் சேர்ந்து தன் சாபம் நீங்கி தெளிவு பெற்றான் வரகுண பாண்டியன்
இந்த ஆலயம் கர்மம் போக்கும், அப்படியே சித்தபிரம்மை, மனநோய், பில்லி சூன்யம், ஏவல் போன்ற பாதிப்புகளுக்கு இது ஆக சிறந்த பரிகார தலம்
இங்கே மனவியாதிகள், ஏவல்கள், பேய் பிசாசு பாதிப்புகள், சித்த பிரம்மை, பில்லி சூனியம் என பாதிக்கபட்டோர் வந்து வேண்டினால் பலன் நிச்சயம் உண்டு
21 நாட்கள் அங்கு விளக்கேற்றி அன்னை மூகாம்பிகையிடம் வேண்டி இந்த பிரகாரங்களை சுற்றி சிவனை சரணடைந்து வழிபட்டால் எந்த பில்லிசூனியமும், பேய் பிசாசுகள் சாபமும் , முன்னோர் சாபமும் எல்லா பாவமும் கழியும், சித்த பிரம்மை சீராகும் இது சத்தியம்
இங்கு 32 தீர்த்தங்கள் உண்டு. இவைகளில் ஒரு ஏக்கர் பரப்புள்ள காருண்யாம்ருத தீர்த்தம் என்பது மிகவும் புகழ் வாய்ந்தது. அதுபோலவே கலியாணத் தீர்த்தம் எனப்படும் பூசத்தீர்த்தமும் மகா பிரசித்தி
அப்படியே இங்குள்ள தீர்த்தங்களில் நீராடி மகப்பேறு பெற்றவர் ஏராளம் உண்டு
அக்காலத்தில் யுவனாசுவன் என்ற அயோத்தி மன்னன் மாந்தாதா என்ற வாரிசை இங்கு நீராடித்தான் பெற்றான்
சித்திரகீர்த்தி என்ற பாண்டியன் இங்கு வந்தே வாரிசை பெற்றுகொண்டான்
தேவவிரதன் என்ற கள்வன் தன் தீய கர்மாவால் இறந்து இங்கே புழுவாய் பிறந்து, இந்த தீர்த்தம் பட்டதால் பாவம் தீர்ந்து முக்தியடைந்தான் என்பது புராண செய்தி
இத்தலம் கர்மா கழிக்கும், பேய் பிசாசு ஏவல் பில்லி சூன்யங்களை ஒழிக்கும், சித்தபிரம்மை மனநோய்களை குணபடுத்தும், இன்னும் மகப்பேற்றை அருளும்
ஜாதகத்தில் சந்திரனால் பாதிப்பு இருந்தால்,சந்திர புத்தி பாதிப்பு இருந்தால் இங்கு வழிபட்டால் தீரும்
இன்னும் பிரம்மஹத்தி தோஷம் முதல் சனிதசா முதல் எல்லா பாதிப்பும் தோஷமும் நீங்கும்
சோழர், பாண்டியர், மராட்டியர், நாயக்கர் என தலைமுறை தலைமுறையாய் கொண்டாடபடும் ஆலயம் இது
இது சிவபெருமானே வந்து ஸ்தாபித்து வழிபட வகைகளும் பூஜை தத்துவங்களும் ஏற்படுத்தி கொடுத்த தலம்
அவரே தேவர்களை வழிபட செய்து மக்களுக்கு வழிகாட்டிய தலம்
மன்னர்களும் சிறந்த ஒருவனை கொண்டே, அந்த வரகுண பாண்டியனை கொண்டே எல்லா மக்களுக்கும் இந்த ஆலயத்தின் பெருமையினை உரக்க சொன்ன ஸ்தலம்
அங்கே சிவன் வரகுண பாண்டியனுக்கு மட்டுமல்ல ஒவ்வொருவருக்கும் அற்புதம் செய்ய காத்து கொண்டிருக்கின்றார், ஒவ்வொருவரின் கர்மமும் துயரமும் குழப்பமும் கஷ்டமும் நீங்க எதிர்பார்த்து கொண்டிருக்கின்றார்
அந்த ஆலய கதவுகள் உங்களுக்காக திறந்துள்ளன, அந்த நடைபாதைகள் உங்களுக்காக காத்திருகின்றன
சிவனருள் உங்களுக்கு கிடைக்குமென்றால் நிச்சயம் செல்லுங்கள், தேடி செல்லுங்கள் உங்கள் கர்மா தீரும், பாவமும் சாபமும் தீரும், கண்ணுக்கு தெரியா சூட்சும சிக்கலெல்லாம் தீரும் வாழ்வு சிறக்கும்
அந்த சிவனோடு கொல்லூரில் இருக்கும் மூகாம்பிகையும் உங்களுக்கு ஞானமும் கல்வியும் தெளிவும் அறிவும் திருவும் வழங்க காத்து கொண்டிருக்கின்றாள்
இந்த மூகாம்பிகை மகா விஷேஷமானவள் மூகாசுரனை சம்ஹரித்த சாபம் நீங்க மூகாம்பிகை இங்கு வந்து நிவர்த்தி பெற்றாள்
மாங்கல்ய தோஷம், களத்திர தோஷம் ஆகியவற்றுக்கு இக்கோயிலில் உள்ள ஸ்ரீமூகாம்பிகைக்கு அபிஷேகம் செய்தால் எல்லாம் மாறும் . இந்த அம்பிகையை மனமுருக பிரார்த்தனை செய்யும் திருமணம் ஆன பெண்களுக்கு கர்ப்பம் வாய்க்கும் அப்படியே சுக பிரசவம் அமையும்
இழந்ததையெல்லாம் மீட்டுதரும் ஆலயம் இது
தஞ்சை அரசின் ஆட்சி உரிமையை இழந்த பிரதாப சிம்மன் என்னும் அரசனின் மனைவியான அம்முனு என்பவள், தாங்கள் மீண்டும் ஆட்சியைப் பெறவும் தங்கள் திருமணம் நிறைவேறவும் இங்கு வந்து லட்ச தீபம் ஏற்றினாள், எல்லா மீள பெற்றாள்
பின் தானே எந்த கோலத்தில் பாவை விளக்கைத் தாங்கி நின்று வழிபட்டால்ளோ அதுபோலவே ஒரு திருவிளக்கை செய்து கொடுத்ததும் தன் பிராத்தனையை நிறைவேற்றினாள்.
அந்த விளக்கு இன்றும் அவள் பெற்ற வரத்தையும் சிவனின் அருளையும் சொல்லி ஒளிவிட்டுகொண்டிருக்கின்றது
திருவிசைநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் தன்னை ஜோதிவடிவாக மாற்றி, காயத்தை காற்றில் கரைத்து சிவனோடு ஐக்கியமான தலம் இது
குரு தலங்களில் திருவிடைமருதூர் மிகவும் முக்கியமானது. திருவிடைமருதூர் ஆலயத்தில் அருளும் தட்சிணாமூர்த்தி வேறெங்கும் காண முடியாத வித்தியாச கோலம் கொண்டவர்.
அந்த திருவிடை மருதூர் மகாலிங்க நாதனை சென்று வணங்குங்கள், என்னென்ன கஷ்டம் உண்டோ எல்லாமே கரையும், எனென்ன சிரமமும் துயரமும் கண்ணீரும் உண்டோ எல்லாம் மாறும் புதுபிறப்பாய் வாழ தொடங்ங்குவீர்கள் இது முக்கால சத்தியம்