டி.வி. அலுவலகத்தில் குண்டு வீசியவர்களை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும்: ராம.கோபாலன்
நாமம் போட்டு மன்றக் கூட்டத்துக்கு வந்த திமுக பெண் கவுன்சிலர் மீது தாக்குதல்
கோயமுத்தூர்: நெற்றியில் நாமத்துடன் வந்த திமுக பெண் கவுன்சிலர் மீது அதிமுக பெண் கவுன்சிலர் தாக்குதல் நடத்தினார். கோவை மாநகராட்சியில் 2015-16ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை வியாழக்கிழமை இன்று தாக்கல் செய்யப்பட்டது. அப்போது மன்றக் கூட்டத்துக்கு நெற்றியில் நாமம் போட்டுக்கொண்டு வந்த திமுக பெண் கவுன்சிலர் மீனா லோகு, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டினார். மீனாவின் செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அதிமுக உறுப்பினர்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நாமம் போட்டுக் கொண்டு வந்த திமுக உறுப்பினர்கள் மீது தண்ணீரை ஊற்றி நாமத்தை அழிக்க அதிமுக உறுப்பினர்கள் முற்பட்டனர். இதைத்தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் மீது அதிமுக உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தினர். அன்னம்மாள் என்ற அதிமுக பெண் கவுன்சிலர் மீனா லோகுவைத் தாக்கினாராம். இதில் மீனா லோகுவுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதை அடுத்து, அதிமுக கவுன்சிலர்களின் தாக்குதலைக் கண்டித்து, திமுக கவுன்சிலர்கள் மன்றக் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பில் ஈடுபட்டனர்.
காந்தி தங்கிய இடத்துக்கு மோடி பார்வையிட வரவேண்டும்: யாழ். தமிழர்கள் விருப்பம்
ரஞ்சி கோப்பையை தக்க வைத்தது கர்நாடகம்
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் கர்நாடக அணி கோப்பையைத் தக்கவைத்துக் கொண்டது. கர்நாடக அணி முதலில் 762 என்ற இமாலய ஸ்கோரை எட்டியது. பின்னர் தமிழ்நாடு அணி தனது முதல் இன்னிங்ஸில் 134 ரன்னுக்கு ஆட்டம் இழந்தது. இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து ஆடிய தமிழக அணி, 411 ரன்களில் ஆட்டம் இழந்தது. இதனால், கர்நாடக அணி ஒரு இன்னிங்ஸ், 217 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுகோப்பையைத் தக்க வைத்துக் கொண்டது. 328 ரன் எடுத்த கருண் நாயர் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
மொரிஷீயஸில் கங்கா தலாவ் புனித இடத்தில் மோடி வழிபாடு
At the Ganga Talao I felt a deeply personal connect…one that comes from the banks of the Ganga in Varanasi. pic.twitter.com/zfnXOy7yxN — Narendra Modi (@narendramodi) March 12, 2015
டி.வி. அலுவலகம் மீது தாக்குதல்: சீமான் கண்டனம்
உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்கா 146 ரன்களில் அபார வெற்றி
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பி பிரிவில் இன்று நடைபெற்ற 36வது லீக் சுற்றுப் போட்டியில், யு ஏஇ அணியை தென்னாப்பிரிக்க அணி 146 ரன் வித்தியாசத்தில் வெற்றி கொண்டது. முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 341 ரன் எடுத்தது. பின்னர் விளையாடிய யு ஏ இ அணி, 47.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 195 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 146 ரன் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. தென்னாப்பிரிக்க அணியில் டிவில்லியர்ஸ் 1 ரன்னில் சதத்தை கோட்டை விட்டார்.
‘வாலு’ படத்துக்கு ‘யு’: வரிவிலக்கும் கிடைத்ததில் சிம்பு மகிழ்ச்சி
#VaaluCensorDay get’s a clean U 🙂 super happy for the team … Special thanks to fans for the love #happyman — STR (@iam_str) March 11, 2015
#STR @iam_str‘s #Vaalu got ‘U’ certificate and also tax exemption from TN Government. @strfans @vijayfilmaker #VaaluCensorDay — STR Simbu (@Actor_SimbuFC) March 11, 2015
உ.பி., நீதிமன்ற வளாகத்தில் காவல் உதவி ஆய்வாளரால் வழக்குரைஞர் சுட்டுக் கொலை
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் வழக்குரைஞர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் குண்டடி பட்டு காயமடைந்தார். இதில், தாக்குதலில் இருந்து தப்பிக்க, தற்காப்புக்காக அவர் தனது துப்பாக்கியால் சுட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த வழக்கறிஞர்கள் போலீஸார் மீதும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மீதும் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். நீதிமன்ற வளாகத்தில் இருந்த வாகனங்களுக்கும் தீ வைத்தனர். இதனால் அந்தப் பகுதி கலவர பூமியானது. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த வழக்கறிஞர் ரோஷன் அகமது என்றும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் பெரோஸ் நபி என்றும் தெரிய வந்துள்ளது. நீதிமன்ற வளாகத்தில் பிற்பகல் 2 மணி அளவில் இந்தச் சம்பவம் நடந்தது. அதையடுத்து மாவட்ட நீதிமன்ற வளாகத்திலும் 5 கி.மீ. தொலைவில் உள்ள அலகாபாத் உயர் நீதிமன்ற பகுதியிலும் வழக்கறிஞர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அப்பகுதியில் கட்டடங்களை சேதப்படுத்தி தீவைத்தனர். போலீஸார் மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். அலகாபாத்-கான்பூர் நெடுஞ்சாலையில் மறியல் நடத்தி போக்குவரத்தை தடுத்தனர். காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு சொந்தமான வாகனங்களுக்கும் தீவைத்தனர். உயர் நீதிமன்ற மூத்த நீதிபதிகள் நேரில் வந்து சமாதானம் செய்தனர். சம்பவ இடத்துக்கு நேரில் சென்று, நிலைமையை நேரில் கண்டறிவதாக வழக்குரைஞர்களிடம் உயர் நீதிமன்ற நீதிபதிகள் உறுதி அளித்தனர். பிறகுதான் உயர் நீதிமன்றத்தில் போராட்டம் தணிந்தது.
தில்லியில் விமான டயர் வெடித்து விபத்து: 150 பயணிகள் பத்திரம்
தில்லியில் தரையிறங்கிய ஓமன் நாட்டு விமானத்தின் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் விமானத்தில் இருந்த 150 பயணிகளும் உயிர் தப்பினர். ஓமன் தலைநகர் மஸ்கட்டிலிருந்து நள்ளிரவு 1.43க்கு கிளம்பிய டபிள்யூ. ஐ. 241 என்ற அந்த விமானம், இன்று காலை 6.10க்கு தில்லி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. விமானத்தை அதன் விமானி பாதுகாப்பாக தரையிறக்கிய போது, அதன் முன் டயர்கள் இரண்டும் திடீரென வெடித்தன. அந்த விமானம் தரையில் பாதுகாப்பாக லேண்டிங் ஆனதும் இந்த விபத்து ஏற்பட்டதால், அதில் பயணம் செய்த 150 பயணிகளும் எவ்வித ஆபத்துமின்றி தப்பினர். விமான டயர் வெடித்ததற்கான காரணம் குறித்து தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.