சென்னை: வேந்தர் மூவீஸ் மதன் குறித்து தவறான தகவல் பரவுவதாக அதன் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இன்று அந்நிறுவனம் சார்பில் வெளியிட்டப்பட்ட அறிக்கையில், இன்று காலை முதல் வேந்தர் மூவீஸ் எஸ். மதன் அவர்களைப் பற்றி தவறான தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன. அதில் சிறிதளவும் உண்மை இல்லை என்பதை தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். – என்று வேந்தர் மூவீஸ் பங்குதாரர் பா.பாலகுருநாதன் பெயரில் அறிக்கை வெளியானது.
வேந்தர் மூவீஸ் மதன் குறித்து தவறான தகவல் கசிவதாக விளக்கம்
வீடு வாங்கினால் மனைவி இலவசம்: இந்தோனேஷியாவில் விநோத விளம்பரம்
ஒரு குழந்தைக்கு ரூ.5 வீதம் ஒதுக்கி அங்கன்வாடி மையங்களுக்கு வழங்க தமிழிசை சௌந்தர்ராஜன் கோரிக்கை
சொத்துக் குவிப்பு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு
86 தமிழக மீனவர்கள் நாளை விடுவிப்பு
புது தில்லி: இலங்கை சிறையில் இருக்கும் 86 தமிழக மீனவர்கள் நாளை விடுதலை செய்யப்படுவார்கள் என இலங்கை தெற்கு மாகாண எம்.எல்.ஏ., செந்தில் தொண்டைமான் தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்களின் படகுகளும் ஓரிரு நாளில் விடுவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தில்லியில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனை சந்தித்த பிறகு அவர் இதனை தெரிவித்தார்.
கைதிகள் விடுதலை விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்படுவோம்: பிடிபி
ஜம்மு அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் விவகாரத்தில், நீதிமன்ற உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டு ஜம்மு-காஷ்மீர் அரசு செயல்படும் என்று பிடிபி கட்சி தெரிவித்தது. இதுதொடர்பாக ஜம்முவில் அக்கட்சியின் மூத்த தலைவரும், மாநில அமைச்சருமான இம்ரான் ராசா அன்சாரி கூறுகையில், “உச்ச நீதிமன்றமும், நீதிமன்றங்களும் என்ன உத்தரவுகளை பிறப்பிக்கிறதோ, அதற்கு கட்டுப்பட்டு செயல்படுவோம்’ என்றார். இந்த விவகாரம் தொடர்பாக பாஜகவுடனோ, மத்திய அரசுடனோ விவாதம் நடத்தப்பட்டதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், “நீதிமன்ற உத்தரவை நாங்கள் செயல்படுத்தினோம்’ என்றார்.
மஸரத் ஆலம் விடுதலை: பாஜக எச்சரிக்கை
புதுதில்லி: மஸரத் ஆலம் விடுதலை விவகாரத்தில் பாஜக தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. மஸரத் ஆலம் விடுதலை உள்ளிட்ட விவகாரங்களில், மென்மையான கொள்கையைக் கடைபிடிப்பதை அனுமதிக்க மாட்டோம் என்று பாஜக தெரிவித்தது. இதுகுறித்து தில்லியில் அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான முக்தர் அப்பாஸ் நக்வி செய்தியாளர்களிடம் கூறியபோது… பயங்கரவாதம், பிரிவினைவாதம் ஆகிய விவகாரங்களை பாஜக சகித்துக் கொண்டிருக்காது. இந்த விவகாரங்களில், மென்மையான போக்கையும், பலவீனமான கொள்கையையும் கடைப்பிடிப்பதை பாஜக அனுமதிக்காது. மஸரத் ஆலம் விடுதலை செய்யப்பட்ட விதத்தில் பாஜகவுக்கு உடன்பாடு கிடையாது. இதை பாஜக எதிர்க்கிறது. இது தவறான நடவடிக்கையாகும். இந்த விவகாரத்தை, மத்திய உள்துறை அமைச்சர் உன்னிப்பாக கவனித்து வருகிறார். அரசமைப்பு சட்டத்துக்கு உள்பட்டு, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.