நாகாலாந்து கொலைச் சம்பவம்: அறிக்கையில் கைதி குறித்து முரண்பட்ட தகவல்
மார்ச்16ல் ஆதிதிராவிடர்/பழங்குடியினர் நலப் பள்ளிகளில் ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில், ஆசிரியர் பணி நியமனத்திற்கான கலந்தாய்வு, வரும் 16ம் தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பாக, ஆதிதிராவிடர் நல இயக்குனர் சிவசண்முகராஜா விடுத்துள்ள அறிக்கை:
ஐ.எஸ்.ஐ. கண்காணிப்பு வளையத்துக்குள் இந்திய தூதரக அதிகாரிகள்: சுஷ்மா ஸ்வராஜ்
புதுதில்லி: பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் அந்நாட்டு உளவுத் துறையான ஐ.எஸ்.ஐ. அமைப்பின் ரகசிய கண்காணிப்பு வளையத்துக்குள் இருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தகவல் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் இந்திய தூதரக அதிகாரிகள் அவமதிக்கப்படுவது தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் நேற்று எழுப்பப் பட்ட ஒரு கேள்விக்கு சுஷ்மா ஸ்வராஜ் பதில் அளித்தார். அப்போது…. கடந்த சில ஆண்டுகளில் பாகிஸ்தான் உட்பட வெளிநாடுகளில் இந்திய தூதரக அதிகாரிகள் அவமதிக்கப்படும் சம்பவங்கள் நடந்துள்ளன. இவை உடனடியாக அந்தந்த நாட்டு அரசுகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன. பாகிஸ்தானைத் தவிர மற்ற நாடுகளில் மீண்டும் அதுபோன்ற சம்பவங்கள் நடைபெறவில்லை. ‘ பாகிஸ்தானில் பணியாற்றும் இந்திய தூதரக அதிகாரிகள் அங்குள்ள உளவு அமைப்பால் ரகசியமாகக் கண்காணிக்கப் படுகின்றனர். ரகசியமாக பின்தொடர்வது, அவர்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பது ஆகிய செயல்களில் அந்நாட்டு உளவுத்துறை ஐ.எஸ்.ஐ. ஈடுபட்டுள்ளது. இந்த விவகாரத்தை பாகிஸ்தான் அரசின் பல்வேறு நிலைகளில் கொண்டு செல்லப்பட்டும், கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டும் பெரிய அளவில் மாற்றம் இல்லை. அமெரிக்காவில் தூதரக அதிகாரி தேவயானி கோபரகடே அவமதிக்கப்பட்டது தொடர்பாக அந்நாட்டு அரசு வருத்தம் தெரிவித்தது. தேவயானி மீதான வழக்குகளை அமெரிக்கா ரத்து செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. என்று கூறிய சுஷ்மா ஸ்வரஜ், கடந்த சில ஆண்டுகளில் சால்வேனியா, ருமேனியா, அல்பேனியா, பாகிஸ்தானில் இந்திய தூதரக அதிகாரிகள் அவமதிக்கப்பட சம்பவங்களை தனது பேச்சில் குறிப்பிட்டார்.
87 வயது மூதாட்டி பலாத்காரம்: 15 வயதுச் சிறுவனுக்கு 30 ஆண்டு சிறை
தனியார் டிவி அலுவலக குண்டுவீச்சு: உள்துறை அறிக்கை கேட்பு
சென்னை:
சென்னையில் இயங்கி வரும் தனியார் செய்தி தொலைக்காட்சி அலுவலகம் மீதான குண்டு வீச்சு தாக்குதல் குறித்து தமிழக அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளது.
சென்னையில் உள்ள தனியார் செய்தி தொலைக்காட்சி அலுவலகம் மீது இன்று அடையாளம் தெரியாத நபர்கள் நான்கு பேர் டிபன்பாக்ஸ் குண்டுகளை வீசினர். இந்தச் சப்மவம் குறித்து கண்டனம் தெரிவித்து மாநிலங்களவையில், திமுக எம்.பி. கனிமொழி பேசினார். இதையடுத்து, இந்தத் தாக்குதல் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கோரியுள்ளது.
5 ஆண்டுகளில் ரூ.1.5 லட்சம் கோடி ரூபாய் ரயில்வேயில் முதலீடு செய்ய எல்.ஐ.சி. ஒப்பந்தம்
புதுதில்லி: ரயில்வே துறையின் வளர்ச்சிக்காக எல்.ஐ.சி. நிறுவனம் ரூ.1.5 லட்சம் கோடியை முதலீடு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மிகப் பெரிய அரசுத் துறை போக்குவரத்து நிறுவனமான ரயில்வே துறையில், நாட்டின் மிகப் பெரிய அரசு காப்பீட்டுத் துறை நிறுவனமான எல்.ஐ.சி. முதலீடு செய்கிறது. ரயில்வே துறையை மேம்படுத்தவும், கட்டுமானப்பணிகளை விரைவுபடுத்துவதற்காகவும் ரூபாய் 1.5 லட்சம் கோடி நிதியை ரயில்வேயில் முதலீடு செய்ய எல்.ஐ.சி முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் தில்லியில் நேற்று மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு, நிதி அமைச்சர் அருண்ஜேட்லி ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது. ஒப்பந்தத்தின்படி, ரயில்வே வளர்ச்சி மற்றும் கட்டுமானப்பணிக்காக எல்.ஐ.சி நிறுவனம் வரும் 5 ஆண்டுகளில் ரூபாய் 1.5 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யும். இதற்கான வட்டியும் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் தொலைக்காட்சி மீதான தாக்குதல் : ஒருவர் சரண்
சென்னை: சென்னையில் தனியார் செய்தி தொலைக்காட்சி மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக இன்று மதுரையில் ஒருவர் சரண் அடைந்துள்ளார். மதுரையில் வழக்கறிஞர் ஒருவரின் துணையுடன் நீதிமன்றத்தில் சரண் அடைந்த அவர் ஜெயம்பாண்டியன் என்றும், தாம் இந்து இளைஞர் சேனா அமைப்பின் தலைவர் என்றும் தெரிவித்துள்ளார். தமது அமைப்பைச் சேர்ந்த நபர்களே இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக தம்மிடம் தொலைபேசியில் தெரிவித்தனர் என்றும் அதனால் தாம் சரண் அடைவதாகவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே அவர் தொடர்பாக நீதிமன்ற நடைமுறைகள் பின்பற்றப்பட்ட பின் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.
தனியார் டிவி மீதான தாக்குதல்: மாநிலங்களவையில் கனிமொழி கண்டனம்
போக்குவரத்து தொழிலாளர்களுடன் மீண்டும் நாளை பேச்சுவார்த்தை
சென்னை: போக்குவரத்துத் தொழிலாளர்களுடன் மீண்டும் நாளை வியாழக்கிழமை இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை தொடங்குகிறது. போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இதையடுத்து பேச்சு வார்த்தை நடத்த அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அரசு குழுவினருடன் குரோம்பேட்டையில் கடந்த 2–ந்தேதி முதல் கட்ட பேச்சு வார்த்ததை நடந்தது. அப்போது இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து புதிய ஊதிய ஒப்பந்தம் தொடர்பான 2–ம் கட்ட பேச்சு வார்த்தை நாளை வியாழக்கிழமை காலை 11 மணிக்கு தொடங்குகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் அரசு குழுவினருடன் தொழிற்சங்க பிரதிநிதிகள் முக்கிய கோரிக்கைகள் குறித்து பேச்சு நடத்துகின்றனர். அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளும் பங்கேற்க இருக்கிறார்கள். பேச்சு வார்த்தையின் போது அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.
சிதம்பரம் பல்கலை., மாணவன் பலி: பஸ் ஓட்டுநர் கைது
சிதம்பரம்: சிதம்பரம் பல்கலைக்கழக மாணவன் தனியார் பஸ்ஸில் அடிபட்டு பலியான சம்பவத்தில் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். சிதம்பரம் அருகே லால்புரத்தைச் சேர்ந்த அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வியியல் மாணவர் குணசேகரன் (வயது 19) மோட்டார் சைக்கிளில் உடற்பயிற்சி வகுப்புக்கு நேற்று காலை சென்றார். சிதம்பரம் கீழவீதியில் வந்தபோது, முன்னால் சென்ற தனியார் பஸ்சை முந்திச் செல்ல முயன்றார். அப்போது ஏற்பட்ட விபத்தில் பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கி, குணசேகரன் உயிரிழந்தார். இது தொடர்பாக சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் லாமேக் வழக்குப்பதிவு செய்து, தனியார் பஸ் டிரைவர் ஆழம்பாடியை சேர்ந்த பாலு மகன் பிரபாகரனை (37) கைது செய்து, சிறையில் அடைத்தார்.