பெண்கள் கார்வாச்சத் பண்டிகையைக் கொண்டாட அணிவகுத்து நிற்கிறார்கள், திருவிழாவின் முன்பு மருதாணி கைகளிலும் கால்களிலும் வரைந்து கொள்கின்றனர்.
கார்வாச்சத் பண்டிகை பெண்கள் தங்கள் கணவரின் நீண்ட ஆயுளுக்காக மேற்கொள்ளும் விரதமாகும். காலை சூரியோதயத்திலிருந்து அஸ்தமனம் வரையில் உணவோ நீரோ அருந்துவதில்லை.
இந்த பண்டிகை இந்த வருடம் அக்.17 வியாழக்கிழமை (இன்று) கொண்டாடப்படுகிறது. இதில் சிவன் பார்வதி கணேசன்,முருகன் ஆகிய கடவுளரை மையமாகக் கொண்டு வணங்குகின்றனர்.
சூரிய உதயத்திலிருந்து ஆரம்பமாகும் பெண்களின் இந்த விரதம் இரவு சந்திரனின் வரவிற்காக காத்திருக்கிறார்கள். சந்திரனைக் கண்டபின் கணவர் கையால் தண்ணீர் அருந்தி இதனை முடிக்கிறார்கள்.
இதற்காக நேற்று பெண்கள் தங்கள் கைகளிலும் கால்களிலும் மருதாணி வைத்துக் கொண்டனர்.
Delhi: Women gear up to celebrate #KarwaChauth, apply henna on the eve of the festival. (Earlier visuals) pic.twitter.com/epiTjAzfag
— ANI (@ANI) October 16, 2019