![ப்ஸ்ட் நைட் கணவருடன் நெகஸ்ட் நைட் கள்ளக்காதலனுடன்; நுாறுபவுனுடன் ஓடிபோன புதுபொண்ணு.! 1 wedding 2](https://dhinasari.com/wp-content/uploads/2019/12/wedding-2.jpg)
கன்னியாகுமரி மாவட்டத்தில் திருமணமான மறுநாளே புதுமணப்பெண் ஒருவர் திடீரென கள்ளக்காதலுடன் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அரசு ஊழியர் ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது.
இரு வீட்டாரும் இந்த திருமணத்தை சிறப்பாக நடத்தி வைத்த நிலையில் அன்றைய தினம் இரவு, முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
முதலிரவு முடிந்த பின்னர் மறுநாள் தனக்கு விடுமுறை இல்லை என்பதால் அரசு ஊழியர் பணிக்கு செல்ல வேண்டும் என்று கூறி பணிக்கு சென்று உள்ளார்
இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனக்கு வரதட்சணையாக கிடைத்த 100 பவுன் நகை மற்றும் விலையுயர்ந்த செல்போன் ஆகியவற்றுடன் திடீரென புதுமணப்பெண் மாயமாகியுள்ளார்.
இதனையடுத்து இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்த போது அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மாயமானது தெரியவந்தது.
இந்நிலையில் அடுத்து இரு வீட்டாரும் காவல்துறையில் மாறி மாறி புகார் கொடுத்துள்ளனர்.
இந்த புகார்கள் குறித்து காவல்துறையினர் மாயமான புதுமணப்பெண்ணையும் அவருடைய கள்ளக்காதலனையும் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது