துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினி 1971 ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த திமுக பேரணியில் ராமர் சீதை உள்பட இந்து கடவுள்கள் படத்திற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது அதை தைரியமாக மட்டுமே பிரசுரம் செய்தது என்று குறிப்பிட்டு பேசினார்.
இதனைத்தொடர்ந்து ஈ வெ ரா வை ரஜினி அவமதித்து விட்டதாகவும் அதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கி.வீரமணி, திருமாவளவன் உள்பட திக திமுக தலைவர்கள் வரிசைகட்டி நின்றனர்.
ஆனால் அதற்கெல்லாம் கொஞ்சமும் அசைந்து கொடுக்காமல் ரஜினி நான் மன்னிப்பு கேட்க முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்தார். இது தமிழகத்தை “பெரியார் மண்” என்று மார்தட்டி வந்த மு.க.ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், கி.வீரமணி கும்பல்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ரஜினிக்கு ஆதரவாக பலரும் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், திரெளபதி பட இயக்குநர் மோகன் ஜியும் ரஜினிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். “மன்னிப்பு கேட்க முடியாது” என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
நடந்த உண்மையை வெளியே தைரியமாக பேசினால் யாரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.