பெருவில் உள்ள ஒரு வழக்கறிஞர் மெய்நிகர் நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது பாலியல் உறவில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வியாழக்கிழமை நடந்த நீதிமன்ற வழக்கு விசாரணையில் ஹெக்டர் சிப்ரியானோ பரேடஸ் ரோபல்ஸ் வழக்கறிஞர்களில் ஒருவராக ஈடுபட்டார். ஆனால் அவர் கேமரா இருப்பதை மறந்து ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்டுள்ளார். அதனை கேமரா நீதிமன்றத்திற்கும் ஊடகங்களுக்கும் ஒளிபரப்பியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கேமராவில் இருப்பதை அறியாத வழக்கறிஞர், ஒரு பெண் நிர்வாணமாக அவர் முன் வர அவரும் தன்னுடைய ஆடையை அகற்றி உடலுறவில் ஈடுப்பட்டுள்ளார்.
வீடியோவில் உரையாடலில் ஸ்பானிஷ் மொழியில் ‘அவர் பாலியல் உறவு வைத்திருக்கிறார்’ என்று கூச்சலிடும் சிலர் கூச்சலிட்டுள்ளனர்.
சிறிது நேரம், அவரை எச்சரிக்க மக்கள் அவரை அழைக்க முயற்சிக்கிறார்கள், ஆனால் அவர் மைக்கை ஆப் செய்து வைத்துள்ளதாக தெரிகிறது. அவரை அழைப்பிலிருந்து நீக்க முடியுமா என்று சிலர் முயற்சி செய்கிறார்கள், ஆனால் நீக்க முடியவில்லை.
விசாரணையை மேற்பார்வையிடும் நீதிபதி ஜான் சச்சுவா டோரஸ் பின்னர் நீதிமன்ற நடவடிக்கைகளை நிறுத்துகிறார்.
‘நீதிமன்றத்தை அவமதித்ததற்காக அவர் ரோபில்ஸ் மீது கோபமடைந்தார்’ என்று பத்திரகைகள் செய்தி வெளியிட்டது.
“இந்த வழக்கறிஞருக்கு தொழிலின் மரியாதை இல்லை” என்று அவர் கூறினார்.
இது சிலருக்கு வேடிக்கையாகத் தோன்றலாம், ஆனால் ரோபல்ஸ் வாழ்க்கைக்கு கடுமையான மாற்றங்களைக் கொண்டிருக்கும். பெருவின் பொது அமைச்சகம் மற்றும் பார் அசோசியேஷன் ஆகியவை ரோபில்ஸுக்கு எதிராக விசாரணைகளைத் தொடங்குகின்றன.
வீடியோவில் காணப்பட்ட பெண் ஒரு பாலியல் தொழிலாளி என்று சிலர் கூறியுள்ளனர், இருப்பினும் ரோபல்ஸ் தனது அறிக்கையை வெளியிடும் வரை பொறுத்திருக்க வேண்டும்.