ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிசயத்தக்க வீடியோ ஒன்று படமாக்கப்பட்டு சமூக வலைதளத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
ராமநாதபுரத்தில் அமைந்துள்ள மண்டபம் அருகே மேகம், கடல் நீரை உறிஞ்சும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது. இதனை அப்படியே படம்பிடித்து சமூக வலைதளத்தில் உலவ விட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு பகுதியில் கடந்த 2 நாட்களாக மழைச்சாரல் பெய்து வருகிறது. தொடர் சாரல் மழையுடன் குளிர் காற்றும் வீசி வருகிறது.
மண்டபம் தெற்கு கடற்கரையில் கடல் நீரை உறிஞ்சும் காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பெரும் வைரலாகி வேகமாக பரவி வருகிறது.