திருமலை ஏழுமலையான் கோயிலில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.வி.ரமணா தனது குடும்பத்தினருடன் வெள்ளிக்கிழமை வழிபாடு செய்தார்.
ஏழுமலையானை வழிபட வியாழக்கிழமை இரவு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.ரமணா குடும்பத்தினருடன் திருமலைக்கு வந்தார். அன்று இரவு ஏகாந்த சேவையில் கலந்து கொண்ட அவர் இரவு திருமலையில் தங்கினார்.
வெள்ளிக்கிழமை காலை ஏழுமலையானை வழிபட சென்ற அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று தரிசனத்துக்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர் கோயிலை விட்டு வெளியில் வந்த அவர் அகண்டம் அருகில் கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து வழிபட்டார். பின்னர், ‘திருமலை ஏழுமலையான் ஆசீா்வாதத்தால் மட்டுமே தான் இந்த நிலையை அடைந்துள்ளதாகவும், அவரை வழிபட்டதால் தன் வாழ்க்கையில் பல அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன’ என்றும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கூறினார் பின்னா் திருச்சானூர் சென்று தாயாரை தரிசித்து தில்லி புறப்பட்டுச் சென்றார்