தன்னுடைய இருசக்கர வாகனத்தில் இருந்த பாம்பை தண்ணீர் கேனால் பிடித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2 நிமிடங்களுக்கும் மேலாக ஓடும் இந்த வீடியோவை இதுவரை 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.
ஸ்கூட்டியின் முன்பு இருந்த பாம்பு வெளியே வந்த பிறகு அங்கிருந்து செல்லாமல் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே இருந்தது. ஆரம்பத்தில் ஹூக் வைத்து அதனை ஒருவர் பிடிக்க முயன்றார்.
ஆனால் அந்த பாம்பு சிறிதும் கூட நகராமல் இருக்கவே பெரிய ப்ளாஸ்டிக் பாட்டிலை வைத்து அந்த பாம்புவின் தலைப்பகுதி வழியே கவிழ்த்து இந்த பாம்பை பிடித்தார்.
தெலுங்கானாவில் நடைபெற்ற இந்த நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. பலரும் இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு கருத்துகளை பின்னூட்டமாக தெரிவித்தனர். ஒரு பின்னூட்டத்ஹ்டில், யுகேந்தர் சைரிகபு என்பவர், எனக்கு அந்த பாம்பை பிடித்தவரை நன்றாக தெரியும். அவர் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் ஸ்நேக் சொசைட்டியின் மூத்த உறுப்பினராக பணியாற்றுகிறார்.
தன்னுடைய வாழ்நாளில் ஆயிர கணக்கான பாம்புகளை அவர் பிடித்திருக்கிறார். மிகவும் பயிற்சி பெற்ற நபர் தான் என்று குறிப்பிட்டிருந்தார்.
Such guests during rains are common…
— Susanta Nanda IFS (@susantananda3) September 7, 2021
But uncommon is the method used to rescue it. Never ever try this😟 pic.twitter.com/zS4h5tDBe8