கிழக்கு நோக்கிச் சாப்பிட ஆயுள்வளரும்.
தெற்கு நோக்கிச் சாப்பிட புகழ் உண்டாகும்.
மேற்கு நோக்கிச் சாப்பிட செல்வம் வளரும்.
வடக்கு நோக்கிச் சாப்பிடக் கூடாது.
பசிக்கும் போது தான் சாப்பிட வேண்டும்.
மிளகு சேர்ப்பதால் உணவில் உள்ள விஷம் முறிகிறது.
உணவில் சீரகம் சேர்ப்பதால் உடம்பை சீராக வைக்கும்.
கடுகும்,வெந்தயம் உஷ்ணத்தைக் குறைக்கும்.
இஞ்சியை உணவில் சேர்ப்பதால் பித்தம் தலை சுற்றல் வாந்தி போன்ற கோளாறுகள் நீங்கும்.
சூர்ய உதயத்திலும் மறையும் பொழுதும் உணவு உண்ணக் கூடாது.
தட்டை மடியில் வைத்தோ படுத்துக் கொண்டோ அல்லது நின்று கொண்டோ கோபத்துடனோ சாப்பிடக்கூடாது
இலையைத் வழித்துச் விரலில் ஒட்டி உள்ளதை நக்கி சாப்பிடக்கூடாது.
வெங்கலம் அலுமினியம் மற்றும் செம்பு பாத்திரங்களில் சமையல் கூடாது.
புரச இலையில் சாப்பிட்டால் புத்தி வளரும்.
வெள்ளித் தட்டில் மற்றும் வாழை இலையில் சாப்பிட்டால் நல்ல அழகு அறிவு கீர்த்தி உண்டாகும்
இரவில் இஞ்சி, கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர், நெல்லிக்காய் ; ஆகியவற்றை சேர்க்கக் கூடாது.
உண்ணும் தட்டில் அல்லது இலையில் முதலில் உப்பு வைத்த பிறகு தான் காய்கறிகளோ அப்பளமோ சாதமோ பரிமாற வேண்டும்
அதே போல் முதலில் கீரையோ வத்தலோ இலையில் வைக்கக் கூடாது. அசுப காரியத்தில் மட்டுமே அப்படி செய்வார்கள்.
செய்யக் கூடாதவை.
சபைகளில் பெரியவர்கள் முன் கால் மேல் கால் போட்டு அமரக் கூடாது.
செவ்வாய், வெள்ளி ஆகிய இரு நாட்களிலும் தலைமுடி வெட்டுதல் நகம் வெட்டுதல் சவரம் செய்து கொள்ளுதல் கூடாது.
தலைமுடிக்கு மந்திரங்களை எளிதில் கிரகிக்கும் தன்மை உண்டு. தலைமுடியைக் கொண்டு பில்லி சூனிய ஏவல் கூட செய்வர். எனவே தலைமுடியையும் நகத்தையும் எக்காரணம் கொண்டும் பிறர் பார்க்கும் படி வெளியில் எறிய கூடாது.
நான்காம் பிறைச் சந்திரனைப் பார்க்கக் கூடாது.
செப்புப் பாத்திரத்தில் பாலை வைக்கக் கூடாது. காளான்களை கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடக் கூடாது.
பட்டு வேட்டி மற்றும் புடவைகளை அணிந்துக் கொண்டு வைதீக காரியங்களைச் செய்யக் கூடாது.
கர்ப்பிணி பெண்கள் மாலை வேளையில் சாப்பிடக் கூடாது.
பெருமூச்சு விடுவது மிகப் பெரும் தவறு.
இலவசமாக யாரிடமும் எள் பெறக்கூடாது
வீட்டில் எலுமிச்சை மூடியில் விளக்கேற்றக் கூடாது.
விளக்கில் அல்லது நெருப்பில் தீப்பற்றிய துணியை மீண்டும் உடுத்திக் கொள்ளக் கூடாது.
விளக்கு வைத்த பிறகு தலை வாருதல் முகம் கழுவுதல் பேன் எடுத்தல் கூடாது.
வெள்ளிக்கிழமை அரிசி புடைப்பது அரிசி வறுப்பது கூடாது.
மிளகாய் வறுப்பது மிளகாய் பொடி அரைப்பது கூடாது.
இதெல்லாம் ஒரு 80 வருடங்களுக்கு முன்பு மிகச் சரியாக கடைபிடித்து வந்தார்கள்.
அதனால் தான் அனுபவம் பெற்ற நம் முன்னோர்களின் ஆயுள் 120 வயது வரை திட காத்திரமாக வாழ்ந்து வந்தார்கள்.
ஆனால் இப்போது பல வகையான நோய்கள் சிறுவயதிலேயே தொற்றிக் கொள்கிறது.
முன்னோர்கள் சொல்லி வைத்த எல்லா விசயங்களிலும் ஒரு காரணம் மறைந்து இருக்கும்.