வனப்பகுதிக்குள் கரடியைப்பார்த்ததும் கம்பீரமாக நடந்துச்சென்ற புலியொன்று தரையில் அமர்ந்த வீடியோவைப்பார்த்த நெட்டிசன்கள் இணையத்தில் பல்வேறு கருத்துக்களைப் பதிவிட்டுவருகின்றனர்.
ஐஎப்எஸ் (IFS) அதிகாரியான சந்தீப் திரிபாதி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட அந்த வீடியோவில் ஒரு காட்டுப்பகுதியொன்றில் புலி நடப்பது போன்று அந்த வீடியோ தொடங்குகிறது.
கம்பீரமாக நடந்து சென்ற நிலையில், தீடிரென கரடி வந்ததும் அதனைத் திரும்பிப்பார்த்தது அந்த புலி. அப்போது கரடி தன்னுடைய பின்னாங்காலில் நின்றவுடன் அமைதியான புலி தரையில் அமர்ந்துவிடுகிறது.
பின்னர் மனிதர்களின் சத்தத்தைக்கேட்டதும் கரடி அவ்விடத்தைவிட்டு ஓடுகிறது. பின்னர் கரடி ஒடிய திசையைப்பார்த்த புலி தொடர்ந்து தரையில் அமர்ந்திருந்தது.. இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களில் 4ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.. இதோடு பலரும் டிவிட்டரில் மறு பதிவிட்டுவருகின்றனர்.
இதோடு மட்டுமின்றி இந்த வீடியோ பார்த்த நெட்டிசன்கள், பல்வேறு எதிர்மறை மற்றும் கேளிக்கையான கருத்துக்களையெல்லாம் பதிவிட்டுவருகின்றனர். டிவிட்டரில் பயனர்கள், ‘இங்கு இயற்கைக்கு மாறாக நடந்துவிட்டது என்றும், புலியைப்பார்த்து ஓடாத கரடி மனிதர்களின் சத்தத்திற்கு ஓடிவிட்டது என்றும்
, புலி மற்றும் கரடி ஆகிய இருவரும் மோதல்களைத் தடுக்கவே புலி உட்கார்ந்திருந்த நிலையிலும், கரடி இறுதியில் திசை மாறி சென்றுவிட்டதாக பதிவிட்டுள்ளனர்.
மேலும் புலி மற்றும் கரடி ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்தினர் எனவும் தங்களது கருத்துக்களை பதிவிட்டுவருகின்றனர்… என்ன தான் நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்திருந்தாலும் அடர்ந்த காட்டுப்பகுதிக்கள் புலி மற்றும் கரடி மேற்கொண்ட இச்செய்கைகள் அனைவராலும் ரசிக்கும் வகையில் அமைந்தது என்று தான் கூற வேண்டும்.
Close encounter!!!
— Sandeep Tripathi, IFS (@sandeepifs) October 14, 2021
A close shave…
For whom…even the tiger seems confused!!!! pic.twitter.com/HD268nTKbQ