சமூக வலைதளங்களில் எப்போதும் ஆனந்த் மஹிந்திராவின் பதிவுகள் எப்போதும் வைரலாவது வழக்கம். அவருடைய பதிவுகளை பார்ப்பதற்கு என்றே பலரும் ரசிகர்களாக உள்ளனர்.
அந்தவகையில் தற்போது அவர் ஒருவர் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் மிகவும் ஆச்சரியமான விஷயம் ஒன்று உள்ளது. அது என்ன?
அந்த வீடியோ பதிவில் உள்ள நபர் ஒருவர் ஓட்டுநர் இல்லாமல் செல்லும் பைக் ஒன்றில் தனியாக சென்று கொண்டிருக்கும் படி காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்தப் பதிவை செய்துள்ள பெண் ஒருவர் தன்னுடைய பதிவில்,”எலோன் மஸ்க்: இந்தியாவில் டிரைவர்கள் இல்லாத வாகனங்களை கொண்டு வர திட்டம் என்று கூறுகிறார். ஆனால் இந்தியாவில்” என்று கூறி இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.
அவரின் பதிவை ஆன்ந்த் மஹிந்திரா தன்னுடைய ட்விட்டர் பதவில் மேற்கொள் காட்டி ஒரு பதிவை செய்துள்ளார். அவரின் பதிவிற்கு பதிலாக ஒருவர் தன்னுடைய பதிவை செய்துள்ளார்.
அதில், “இந்தியாவில் மஹிந்திரா நிறுவனம் எப்போது டிரைவர்கள் இல்லாமல் இயங்கும் முழுமையான தான் இயங்கி காரை உற்பத்தி செய்ய உள்ளது?” என்ற கேள்வியை கேட்டுள்ளார்.
Elon Musk: I want to bring driverless vehicles to India.
— Dr. Ajayita (@DoctorAjayita) October 19, 2021
Meanwhile India… pic.twitter.com/9YSFg0bYkW
Love this…Musafir hoon yaaron… na chalak hai, na thikaana.. https://t.co/9sYxZaDhlk
— anand mahindra (@anandmahindra) October 20, 2021