சபரிமலையில் கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் 18-ந் தேதி முதல் கோவை வழியாக 5 சிறப்பு ரெயில்களை இயக்க சேலம் கோட்ட தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது
வண்டி எண் 07133 செகந்திராபாத்தில் இருந்து கொல்லத்திற்கு வரும் 18-ந் தேதியில் இருந்து சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
இந்த ரெயில் செகந்திராபாத்தில் இருந்து காலை 5.40-க்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 1.50-க்கு கொல்லத்தை சென்றடைகிறது.
வண்டி எண் 07134 கொல்லத்தில் இருந்து 19-ந் தேதி இரவு 7.35-க்கு புறப்பட்டு செகந்திராபாத்திற்கு 21-ந் தேதி காலை 3.30-க்கு சென்றடைகிறது.
வண்டி எண் 07135 கச்சேகுடாவில் இருந்து கொல்லத்திற்கு வரும் 22-ந் தேதி இயக்கப்படுகிறது. கச்சேகுடாவில் இருந்து காலை 5.30-க்கு புறப்படும் இந்த ரெயில் மறுநாள் மதியம் 1.50-க்கு கொல்லத்தை சென்றடைகிறது.
இதேபோன்று வண்டி எண் 07136 கொல்லத்தில் இருந்து 23-ந் தேதி இரவு 7.35-க்கு புறப்பட்டு 25-ந் தேதி காலை 3.30-க்கு கச்சேகுடாவிற்கு சென்றடைகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் நாந்தெட்டில் இருந்து வண்டி எண் 07137 கொல்லத்திற்கு வரும் 23-ந் தேதி இயக்கப்படுகிறது. இந்த ரெயில் நாந்தெட்டில் இருந்து காலை 9.45-க்கு புறப்பட்டு மறுநாள் இரவு 9.40-க்கு கொல்லத்தை சென்றடைகிறது.
இந்த 3 ரெயில்களும், நெல்லூர், திருப்பதி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, கோவை, பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
கொல்லத்தில் இருந்து கோவை வழியாக திருப்பதிக்கு சிறப்பு ரெயில் வருகிற வரும் 25-ந் தேதி இயக்கப்படுகிறது. இரவு கொல்லத்தில் இருந்து 12.45 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 07506), மறுநாள் மாலை 5.10 மணிக்கு திருப்பதியைச் சென்றடையும்.
இந்த ரெயில், காயன்குளம், மாவேலிக்கரை, செங்கனூர், திருவல்லா, சங்கனாச்சேரி, கோட்டயம், எர்ணாகுளம் டவுன், திருச்சூர் பாலக்காடு, கோவை, ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐதராபாத்தில் இருந்து (வண்டி எண் 07117) 21-ந் தேதி மதியம் 2.10-க்கும், கொல்லத்தில் இருந்து (வண்டி எண் 07118) 23-ந் தேதி காலை 2.30-க்கும் இயக்கப்படுகிறது.
இந்த 5 சபரிமலை சிறப்பு ரெயில்களும் முழுவதும் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளை கொண்டதாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.