செல்போன் மூலம் கொரோனா பரிசோதனை செய்யும் முறையை அமெரிக்கா கண்டறிந்துள்ளது.
இதில் குறைந்த கட்டணத்தில் 20 நிமிடத்தில் ரிசல்ட் தெரிந்துவிடும்.
கொரோனா பரிசோதனைக்காக ஆர்.டி.பி.சி.ஆர் முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் முடிவுகள் வருவதற்கு பல மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு அமெரிக்காவில் வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ‘ செல்போன்’ மூலம் கொரோனா பரிசோதனை நடத்துவதற்கான புதிய முறையை கண்டுபிடித்துள்ளார்கள்.
“ஹார்மணி” கொரோனா பரிசோதனை முறை என்று அழைக்கப்படுகிற இதில் சார்ஸ் கோவ் -2 வைரசின் மரபணுப்பொருள் கண்டறியப்படுகிறது.
இதுகுறித்து வாஷிங்டன் பல்கலைகழக பேராசிரியர் கூறுகையில்:
இந்த சோதனை எங்கும் பயன்படுத்தக்கூடிய அளவுக்கு எளிமையானதாக நாங்கள் வடிவமைத்துள்ளோம். மேலும் குறைந்த கட்டணத்தில் உயர் செயல்திறன் கொண்ட இந்த சோதனை உள்நாட்டிலும், உலகமெங்கும் அணுகக் கூடியதாக இருக்கும்.
மேலும் இந்த சோதனையானது நாசி ஸ்வாப் மாதிரியில் கோவ் – ஆர்.என்.ஏ மரபணு இருப்பதைக் கண்டறிய ஆர்.டி.பி.சி.ஆர் போன்ற முறையை பயன்படுத்துகிறது.
இதன் மூலம் ஸ்மார்ட்போனின் ‘உணர்த்தும் கருவியை’ இயக்கவும், முடிவை தெரிந்து கொள்ளவும் பயன்படுத்தப்படுகிறது.
ஒரு நிலையான வெப்பநிலையில் இந்த சோதனை மேற்கொள்ளப்படுகிறது. எனவே இது வெப்பம் மற்றும் குளிர்விக்கும் நேரத்தை நீக்குகிறது. 20 நிமிடங்களில் முடிவையும் அளித்து விடுகிறது.
இதில் பயன்படுத்தக்கூடிய உணர்த்தும் கருவி (Detector) ஒரே நேரத்தில் நான்கு மாதிரிகளை சோதிக்கிற திறன் கொண்டது என்றும் இந்த சோதனையின் முடிவு மிகத்துல்லியமாக உள்ளது என்றும் கூறப்படுகிறது.
இந்த ஹார்மனி கொரோனா பரிசோதனை முறையில், வைரஸ் மரபணுவின் மூன்று வெவ்வேறு பகுதிகளை கண்டறிந்து, ஒரு புதிய மாறுபாடு ஒரு பிராந்தியத்தில் பல பிறழ்வுகளைக் கொண்டிருந்தால், புதிய சோதனை மற்ற இரண்டையும் கண்டறிய முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
அதாவது ‘ ஸ்பைக் புரதம்’ என்கிற மரபணுவின் முக்கிய பகுதியில் டஜன் கணக்கிலான உருமாற்றங்களை கொண்டுள்ள ‘ ஒமைக்ரான்’ மாறுபாட்டை இதனால் கண்டறிய முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள்.
இந்த ஹார்மனி பரிசோதனை முறையை வீட்டு உபயோகத்துக்கு ஏற்ற விதத்தில் மாற்றி அமைக்க விஞ்ஞானிகள் விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.