பறவை (Bird) ஒன்று கூடு கட்ட நுணுக்கமாக இலையிலிருந்து தண்டுகளை பிரித்தெடுக்கும் வீடியோ தான் பார்வையாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று IPS அதிகாரி திபன்ஷூ கப்ரா என்பவர் அவரது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில் Columbidae என்ற ஒரு குடும்பத்தை சார்ந்த நீலம் மற்றும் பச்சை நிறம் கலந்த அழகிய பறவையொன்று கூடு கட்ட முயற்சி செய்வதை காண முடிகிறது.
பசுமையான மரக்கிளையில் அந்த பறவை அமர்ந்துகொண்டு இலைகளின் நடுவே உள்ள தண்டை நுணுக்கமாக தனது அலகினால் தனியே பிரித்தெடுக்கிறது.
அவ்வாறு தனியே பிரித்தெடுத்த அந்த தண்டுகளை, பறவை தன்னுடைய வாலின் பின்னல் சொருகிக்கொள்கிறது. பறவையின் இந்த திறமையை கண்ட இணையவாசிகள் வியப்பில் ஆழ்ந்து போயிருக்கின்றனர்.
Columbidae குடும்பத்தை சார்ந்த பறவைகள் குட்டையான கழுத்து மற்றும் மெல்லிய அலகு கொண்ட சிறிய, குண்டான பறவைகள். இவ்வகை பறவைகள் விதைகள், பழங்கள் மற்றும் தாவரங்களை உண்ணுகின்றன.
இந்த வீடியோவை பதிவிட்ட அதிகாரி திபன்ஷூ கப்ரா, அந்த வீடியோ க்ளிப்புடன், “இந்தப் பறவை இயற்கையின் மிகவும் திறமையான கட்டிடக் கலைஞர்களில் ஒன்றாகும் என்ற கேப்ஷனையும் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ அறுபத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை தாண்டியுள்ளது. இதனை பார்த்த பயனர்கள் “இவர்கள் இயற்கையின் சிறந்த கட்டிடக் கலைஞர்கள்” என்றும், இவை மிகவும் புத்திசாலி, க்யூட் என்றும் பல நல்லவிதமான கமெண்டுகளை செய்து வருகின்றனர்.
घोंसला बनाने के लिए पत्तियों के हिस्से को चतुराई से बटोरकर ले जाती नन्ही #Columbidae चिड़िया को कुदरत के सबसे कुशल आर्कीटेक्ट में गिना जा सकता है… pic.twitter.com/ProW3sops1
— Dipanshu Kabra (@ipskabra) February 4, 2022