இயக்குனர் மணிரத்னம் படங்களில் தாலி சென்டிமென்ட் எந்த அளவுக்கு பயன்படுத்தப் பட்டுள்ளது என்பது, தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. பேஸ்புக், வாட்ஸ் அப் ஆகியவற்றில் இந்த விஷயம், முனைவர் பட்ட ஆய்வுக்கு எடுத்துக் கொடுக்கப்படும் தலைப்பைப் போல், தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. மணிரத்னம் தனது படங்களின் கதைகளில் எவ்வாறு ‘தாலி’யைப் புகுத்தியிருக்கிறார். இதோ பட்டியல்… தாலி கட்டி அவரவர் வீட்டில் வாழ்ந்தால் – அலைபாயுதே தாலி கட்டாமல் ஊருக்கு தெரிய வாழ்ந்தால் – ஓ காதல் கண்மணி தாலி கட்டியும் வாழாமல் இருந்தால் – மௌன ராகம் இன்னொருவன் தாலி கட்டிய பெண்ணை கடத்தி கொண்டு போனால் -ராவணன் தாலி கட்டலாமா வேண்டாமா என சிந்தித்தால் – கடல் ஸ்கூல் பொண்ணுக்கு தாலி கட்டினால் – நாயகன் ஒரு மனைவிக்கு தாலி கட்டிவிட்டு இரு மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்தால் – அக்னி நட்சத்திரம் ஒரு பொண்ணுக்கு இரண்டு பேர் தாலி கட்ட நினைத்தால் – திருடா திருடா தாலி கட்டிவிட்டு புருஷனுக்காக போராடினால் – ரோஜா இன்னொருத்தர் மனைவிக்கு தாலி கட்டினால் – தளபதி இது மணிரத்னம் இயக்கும் படங்களில் இழையோடும் கதைக் கருவாகப் பார்க்கப் படுகிறது. ஆக, மெய்யாலுமே எவரேனும் முனைவர் பட்ட ஆய்வுக்கு தலைப்பு தேடினால்… இந்தத் தலைப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்…. #ஜஸ்ட்ஃபார்ஃபன்