ஆர்டிகிள் 370 நீக்கப்பட்டது வரவேற்கத்தக்கது என்று தெரிவித்த அமலா பால் இந்திய வரைபடத்தில் காஷ்மீர் தலையில் காவி தலைப்பாகை கட்டியபடி உள்ள புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே இது போன்ற முடிவுகளை அமலுக்கு கொண்டு வர முடியும் என்று பாராட்டியிருந்தார்.
அமலா பாலின் போஸ்ட்டை பார்த்த நெட்டிசன்கள் கோபம் அடைந்தனர். அது என்ன காஷ்மீர் தலையில் காவி தலைப்பாகை, நம் தேசியக் கொடியின் மற்ற இரண்டு வர்ணங்கள் எங்கே. இப்படி யோசிக்காமல் எதையாவது செய்து நானும் கருத்து தெரிவிக்கிறேன் என்று சீன் போட வேண்டாம் என்று நெட்டிசன்கள் அவரை விளாசியுள்ளனர்.