இவர் 9-ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். இவரது மனைவி ரேணுகா, மகன் திலீபன் வயது 20, மகள் திவ்யா வயது 18 ஆகியோரும் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனது தந்தை வைத்திருந்த சந்தன கட்டைகள் மூலம் நான் வேலை செய்து வருகிறேன். அதுவும் தீர்ந்து விட்டால் என்ன செய்வது என தெரியவில்லை. இதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கருணையுள்ளதுடன் பரிசீலனை செய்ய வேண்டும்.
இவரது பொருட்கள் சென்னை பூம்புகார் கடையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு குஜராத்தில் நர்மதை மாவட்டத்தில் சர்தார் வல்லபாய் படேலின் 182 மீட்டர் உயர சிலை திறக்கப்பட்டது.
இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் பூம்புகாரில் விற்பனைக்கு இருந்த டிகே பரணியின் பாரத்மாதா சிலையை வாங்கி சென்று பிரதமர் மோடிக்கு பரிசளித்தனர்.