இத்தாலி தலைநகர் ரோமில் புகழ்பெற்ற மிக முக்கிய வரலாற்று சின்னமாக திகழ்வது ஸ்பானிஷ் படிகள். ரோமானிய கட்டிடக்கலையின் சிறப்பை உணர்த்தக்கூடியது.. இந்த படிகள் 1776 ஆம் ஆண்டு ப்ரான்செஸ்கோ டி சாங்டிஸ் என்ற கட்டிடக் கலை வல்லுநரால் வடிவமைக்கப்பட்டது
174 படிகளைக் கொண்ட இதன் உச்சிப்பகுதியில் ட்ரினிடா டி மான்டி என்ற தேவாலயம் அமைந்துள்ளது. இந்நிலையில் சமீபகாலமாக இங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
புராதன சின்னங்களை பாதுகாக்கும் வகையில் பல புதிய விதிகளை அமல்படுத்தி வருகிறது அந்நாட்டு அரசு.இந்நிலையில் அவர்கள் படிகளில் உட்கார்ந்து வீடியோ மற்றும் புகைப்படம் எடுப்பது ஆகியவற்றால் வரலாற்றுச்சின்னங்களுக்கு பாதிப்பு ஏற்படுமோ என்று புகார்கள் எழுந்த நிலையில்,
இதையொட்டி சிறப்பு சுற்றுலா பிரிவு காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஸ்பானிஷ் படிகளில் அமரும் சுற்றுலா பயணிகளை அவர்கள் விசில் அடித்து எச்சரித்து அனுப்புவார்கள். அதனையும் மீறி அவர்கள் படிக்கட்டில் அமர்ந்தால் 400 யூரோ (இந்திய மதிப்பில் சுமார் ரூ.30 ஆயிரம்) அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
.