விஐபி., விவிஐபி, தரிசனங்கள் நேற்றுடன் நிறைவடைந்தன. இதனை முன்னிட்டு, எவரெல்லாம் விஐபி., விவிஐபி., பாஸ் கேட்டார்களோ அவர்களுக்கெல்லாம் அளித்து, அனைத்தையும் காலி செய்யும்படி மாவட்ட ஆட்சியரகத்தில் கட்டளை இட்டிருந்தார்களோ என்னவோ..! நேற்று பலருக்கும் விஐபி பாஸ் எளிதாகக் கிடைத்து, விரைவில் அத்திவரதரை தரிசனம் செய்ய முடிந்தது என்று பக்தர்கள் கூறினர்.
அத்திவரதரை இதுவரை 1 கோடிக்கும் அதிகமானோர் தரிசித்துள்ளதாக அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இன்றுடன் தரிசனம் நிறைவு பெறும் நிலையில், நாளை அனந்தசரஸ் திருக்குளத்தில் அத்திவரதர் எழுந்தருளுகிறார். இனி 2059-ல் தான் அத்திவரதர் பெருமான் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.