― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeதமிழகம்3 மாவட்டங்களில் 3 நாட்கள் கனமழை பெய்யும் ! வானிலை மையம் !

3 மாவட்டங்களில் 3 நாட்கள் கனமழை பெய்யும் ! வானிலை மையம் !

- Advertisement -

தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா , கர்நாடகா, மகாராஷ்டிரா உள்பட பல்வேறு மாநிலங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் அந்த மாநிலங்களில் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன.

தமிழகத்திலும் நீலகிரி மாவட்டமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு அங்கு கனமழை பெய்தது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கும் ,பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் இன்று முதல் 3 நாள்களுக்கு தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், “தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக தமிழகத்தின் சில பகுதிகளிலும் நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களிலும் வெள்ளிக்கிழமை முதல் சனி, ஞாயிறு  ஆகிய மூன்று நாள்கள் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” என்றார்கள். வியாழக்கிழமை நிலவரப்படி, நீலகிரி மாவட்டம் தேவாலாவில் அதிகபட்சமாக 80 மில்லிமீட்டர் மழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் 70 மில்லிமீட்டர் மழையும், திருத்தணி, திருவேலங்காடு, சோழவரம், அரக்கோணம் பகதியில் தலா 60 மில்லி மீட்டர் மழையும், கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 50 மில்லி மீட்டர் மழையும் பெய்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version