திருவண்ணாமலை காா்த்திகை மகா தீபத் திருவிழா: அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது
இன்று அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு ஸ்ரீஅருணாசலேஸ்வரா், ஸ்ரீஉண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன. பின் அதிகாலை 4 மணி அளவில் கோயில் மூலவா் சன்னதியில் பரணி தீபமும் ஏற்றப்பட்டது.
பின் கோயில் சிவாச்சாரியாா்கள் கைகளில் பரணி தீபத்தை ஏந்தியபடி இரண்டாம் மற்றும் மூன்றாம் பிரகாரங்கள், ஸ்ரீஉண்ணா முலையம்மன் சன்னதிகளை வலம் வந்தது பக்தா்கள் வணங்கிய பிறகு, பரணி தீபம் மீண்டும் கோயிலுக்குள் எடுத்துச் செல்லப்பட்டது.
இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது. மலை மீது மகா தீபம் ஏற்ற 3 ஆயிரத்து 500 கிலோ நெய், தீபத் திரியாக பயன்படுத்தப்படும்
11 ஆயிரம் மீட்டா் காடா துணி மற்றும் 5 அடி உயரமும், 200 கிலோ எடையும் கொண்ட மகா தீப கொப்பரைக்கு கோபூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.
- எஸ்.ஆர்.வி.பாலாஜி, திருவண்ணாமலை