தீபம் ஏற்றும் போது கூறவேண்டிய ஸ்லோகம்:
தீபம் ஜோதி பரப்பரஹ்மம்: தீபம் ஜோதி ஜனார்தணம்: தீபோமே ஹரது பாபம் : தீபம் ஜோதி நமோஸ்துதே:
சுபம் கரோதி கல்யாணம் ஆரோக்கியம் தன சம்பதம் சத்ரு புத்தி விநாசாய தீபஜோதி நமோஸ்துதே!
இல்லக விளக்கது விருள்கெ டுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.
— அப்பர் தேவாரம் 4-11-8
பொருள்
1.இல்லத்தினுள் உள்ள விளக்கானது இருளை கெடுப்பது. அதாவது ஒளி தருவது;
2.சொல்லினுள் உள்ள விளக்கானது ஜோதி வடிவில் உள்ளது;
3.பலருடைய மனதில் உள்ள விளக்கு அது எல்லோரும் காண்பது.
4.நல்லவர்களின் மனதில் உள்ள விளக்கு நமச்சிவாய” என்ற மந்திரம்
நமச்சிவாய என்னும் விளக்கு அறியாமை எனும் இருளை அகற்றும்; சிவஜோதியில் கலக்க உதவும்.