ஆண்டுதோறும் கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடுகிற இந்து சமய விழா கிருஷ்ண ஜெயந்தி. ஆவணி மாதத்தில் தேய்பிறையின் எட்டாம் நிலையில் (அட்டமி திதி) ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாளில் இவ்விழா நிகழ்கிறது.
இந்த ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட இருக்கிறது. சமஸ்கிருதத்தில் கிருஷ்ண ஜன்மாஷ்டமி என்றும் தென்னிந்தியாவில் கோகுலாஷ்டமி என்றும் இவ்விழா குறிக்கப்படுகிறது. இந்தியாவின் பல பகுதிகளில் பல்வேறு வகைகளில் இவ்விழா கொண்டாடப்படுகிறது.
இந்த விசேஷத்தில், திருமணமான பெண்கள் நாள் முழுவதும் விரதம் இருப்பார்கள் மற்றும் நள்ளிரவு 12 மணிக்குப் பிறகுதான் உணவு உட்கொள்கிறார்கள்.
கிருஷ்ண ஜன்மாஷ்டமியையொட்டி, கிருஷ்ணருக்கு மக்கள் பல்வேறு வகையான பழங்கள் மற்றும் உணவுகளை வழங்குகிறார்கள். ஆனால் கிருஷ்ணனுக்கு பிடித்த உணவுகள் உங்களுக்குத் தெரியுமா? பகவான் கிருஷ்ணர் விரும்பும் பல சிற்றுண்டிகளும் இனிப்பு வகைகள் பற்றி காணலாம்.
முறுக்கு
கிருஷ்ணர் விரும்பி சாப்பிடும் சமையல் வகைகளில் பால், வெண்ணெய், நெய், தயிர், வறுத்த பொருட்கள் போன்றவை உள்ளன, முறுக்கு என்பது எண்ணையில் பொரித்த ஒரு சிற்றுண்டியாகும். இது கிருஷ்ண ஜெயந்திக்கு பகவான் கிருஷ்ணனுக்கு வைத்து படைக்கப்படுகிறது.
தென்னிந்தியாவில் முருக்கு மிகவும் பிரபலமான திண்பண்டம். குறிப்பாக தென்னிந்தியாவில் பகவான் கிருஷ்ணருக்கு முறுக்கு வைத்து படைக்கப்படுகிறது. ஏனெனில் இது அவருக்கு மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்றாகும்.
லட்டு
அனைத்து பண்டிகைகளிலும் லட்டு மிகவும் முக்கிய இடத்தை பிடிக்கிறது. ஏனெனில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த இனிப்பு தின்பண்டங்களுள் லட்டுவும் ஒன்று.
பண்டிகைகள் மற்றும் விழா நாட்களில் பல்வேறு வகையான லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. இருப்பினும், பெசன் லட்டு மிகவும் எளிதானது, சுவையானது மற்றும் கிருஷ்ணரின் விருப்பமான உணவு. இதை கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணனுக்கு வைத்து வழிபடலாம்.
கொடுபாலே
கொடுபாலே ஒரு பொதுவான தென்னிந்திய சிற்றுண்டி செய்முறையாகும். இது கிருஷ்ண ஜெயந்திக்காக சிறப்பாக செய்யப்படும் திண்பண்டம். இது மிருதுவான, காரமான சிற்றுண்டி செய்முறையாகும், இது கிருஷ்ணனுக்கு பிடித்த தின்பண்டங்களும் ஒன்று.
கியா ஹல்வா
பகவான் கிருஷ்ணரின் விருப்பமான உணவுகளில், கியா ஹல்வாவை நீங்கள் தவறவிட முடியாது. கிருஷ்ண ஜெயந்திக்கு நீங்கள் தயார் செய்ய வேண்டிய சுவையான இனிப்பு பண்டம் இது. இந்த செய்முறையின் முக்கிய மூலப்பொருள் நெய் மற்றும் உலர்ந்த பழங்களுடன் பூசணி சேர்த்து தயாரிக்கப்படுகிறது. எனவே, கியா ஹல்வாவை சுவையாக செய்து கிருஷ்ணனுக்கு படைக்கவும்.
ஆலு போஹா
யாராவது நமக்கு போஹா வழங்கும்போது, (எந்த வடிவத்திலும்) நாம் அதை மறுக்கக்கூடாது என்று கூறப்படுகிறது. கிருஷ்ணர் போஹாவை விரும்புவதால், நாம் அதை இறைவனுக்கு சமர்ப்பித்து பின்னர் உட்கொள்வது நல்லது.
புளி அவல்
போஹா மிக முக்கியமான உணவாகவும் பிடித்த உணவாகவும் இருப்பதால், கிருஷ்ண ஜெயந்திக்கு புளி அவல் செய்வதை மறந்துவிடாதீர்கள்.
தேங்காய் பர்பி
தேங்காய் பர்பியும் கிருஷ்ணரின் எளிய மற்றும் விருப்பமான உணவாகும். இனிப்பு சமையல் வகைகளில், நீங்கள் தயார் செய்யக்கூடிய எளிதான திண்பண்டம் இது. சர்க்கரையின் இனிப்பும் நெய் மற்றும் தேங்காயின் சுவையும் அருமையாக இருக்கும்.
எனவே தேங்காய் பர்பியை சுவையாக தயாரித்து இறைவனுக்கு படைக்கவும். இது இறைவனுக்கு நைவேத்தியமாக பரிமாறப்பட்டு பின்னர் பிரசாதமாக விநியோகிக்கப்படலாம்.
கோயா பேடா
ஒவ்வொரு கிருஷ்ண ஜெயந்திக்கு வட இந்தியாவில் மிகவும் பிரபலமான கோயா அல்லது கோவா பேடா இனிப்பு தயார் செய்யப்பட்டு இறைவனுக்கு படைக்கப்படுகிறது. பாம் மற்றும் பல உலர்ந்த பழங்கள் சேர்த்து இந்த இனிப்பு செய்யப்படுவதால், இதன் சுவை நன்றாக இருக்கும். இது மிகவும் பணக்கார இனிப்பு உணவாகும்.
தம்பிட்டு
தம்பித்து தென்னிந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற இனிப்பு வகைகளுள் ஒன்று. பச்சரிசி, பாகு வெல்லம், தேங்காய், வெள்ளை எள், நெய் மற்றும் ஏலாக்காய் தூள் சேர்த்து தயாரிக்கப்படுகிறது.
இது கிருஷ்ணனுக்கு மிகவும் பிடித்த இனிப்பு வகைகளுள் ஒன்று. மேலும். கிருஷ்ண ஜெயந்தி அன்று இந்த இனிப்பை பகவானுக்கு வைத்து படைக்க மருந்துவிடாதீர்கள்.
சாபுதானா கீர்
சாபுதானா கீர் ஒரு சுவையான இனிப்பு ஆகும். இது பொதுவாக எந்த விரத விழாவிலும் தயாரிக்கப்படுகிறது. எனவே, இந்த இனிப்பு கிருஷ்ண ஜெயந்தி அன்றும் தயாரிக்கப்பட்டு இறைவனுக்கு படைக்கப்படுகிறது.. இவை பகவான் கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தமான இனிப்பு மற்றும் சிற்றுண்டி.