விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரைத் திருவிழா திருவரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 9ஆம் நாளான இன்று அதிகாலை, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து சீர் வரிசையாக வந்த கிளி மற்றும் சாற்று மாலையை அணிந்தபடி புறப்பட்ட நம்பெருமாள், சித்திரைத் திருத்தேரில் எழுந்தருளினார்.
நம்பெருமாளின் திருத்தேரை பல்லாயிரக் கணக்கான பக்தர்கள், திருவரங்கா ஸ்ரீரங்கா என்ற முழக்கத்துடன் பக்தி பரவசம் பொங்க வடம் தொட்டு இழுத்தனர்.
சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு இன்று திருச்சியில் உள்ளூர் விடுமுறையும் மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் படங்களுக்கு …