சபரிமலையில் பிரசித்திப் பெற்ற மண்டல பூஜை நாளை நடைபெறுவதையொட்டி கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது.
நாளை பகல் 12.30 மணிக்கு மேல் மண்டல பூஜை நடைபெறும், நாளை இரவு 11 மணியளவில் கோயில் நடை சாத்தப்படும்.
நாளையுடன் 41 நாள் நீண்ட இவ்வருட மண்டல காலம் நிறைவடையும், 28, 29 ஆகிய தேதிகளில் கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும்.
மீண்டும் மகர விளக்கு பூஜைகளுக்காக வரும் 30ம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும்.