காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் துர்கா ஸ்டாலின் நேற்று வழிபாடு நடத்தினார்.
உலக பிரசித்திப்பெற்றதும், சக்தி பீடங்களில் முதன்மையானதுமான காஞ்சிபுரம் காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன் கோவிலில் ஆஷாட நவராத்திரி உற்சவத்தில் காமாட்சி அம்மனையும், வராகி அம்மனையும் தரிசனம் செய்வது சிறப்பு.
துர்கா ஸ்டாலின் நேற்று காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு வருகை தந்தார்.
காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் பிரதான வாசலாக உள்ள கிழக்கு கோபுர வாசல் வழியாக தான் முக்கிய பிரமுகர்கள் முதல் பொது மக்கள் அனைவரும் கோவிலுக்குள் செல்வர்.
கோவிலுக்கு வருகைப் புரிந்த துர்கா ஸ்டாலின், மேற்கு கோபுர வாசல் வழியாக உள்ளே சென்று பின்னர் பேட்டரி கார் மூலம் காமாட்சியம்மன் மூலஸ்தானம் அமைந்துள்ள பகுதிக்கு வந்தடைந்தார்.
பின்னர் காமாட்சியம்மன் கோவிலில் நடைபெற்ற ஆஷாட நவராத்திரியை ஒட்டிய சிறப்பு அலங்காரத்தில் வீணையுடன் காட்சி அளித்த காமாட்சி அம்மனையும், வராகி அம்மனையும் அவர் வழிபட்டார் சிறப்பு பூஜைகளிலும் அவர் பங்கேற்றார்.
பின்னர் கோவில் தங்க கொடி மரத்தின் அருகே சென்று வழிபட்ட துர்கா ஸ்டாலின், கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட பிரசாதங்களை பெற்றுக் கொண்டார்.
அத்துடன் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த பெண்களுடனும் துர்கா ஸ்டாலின் சிறிது நேரம் உரையாடினார்